twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீபிகா-ரன்பீர் காதல் ஓவர்!

    |

    Deepika Padukone
    தீபிகா-ரன்பீர் காதல் கதை முடிந்துவிட்டதாம்.

    இந்தக் காதல் உடைந்து போனதற்கு பல காரணங்கள் உலா வருகின்றன. அதில் லேட்டஸ்ட் காரணம், கேத்ரீனா கைப் தானாம்.

    சல்மானுடன் உலா வந்த கேத்ரீனா அவரை வெட்டிவிட்டுவிட்டு ரன்பீருடன் நெருக்கமாகிவிட்டாராம். இந்த கெமி்ஸ்ட்ரி காரணமாக, தீபிகாவுக்கும் ரன்பீருக்கும்
    இடையிலான மேத்தமேட்டிக்ஸ் சரி வரவில்லை. அதனால் ரன்பீருடனான அக்கெளண்ட்ஸை முடித்துவிட்டாராம் தீபிகா.

    ரன்பீருக்காக தன்ககு மிக நெருக்கமாக இருந்த நிஹார் பாண்ட்யா, யுவராஜ் சிங்கையெல்லாம் வெட்டிவிட்டார் தீபிகா. இதை எடுத்துச் சொல்லி கேத்ரீனாவுடன் நெருக்கம் வேண்டாம் என்று ரன்பீரிடம் கெஞ்சிப் பாராத்தாராம் தீபிகா.

    ஆனால், ரன்பீ்ர் அதை காதில் வாங்காமல் கேத்ரீனாவே கதி என்று சுற்ற ஆரம்பித்ததால் குட் பை சொல்லிவிட்டாராம் தீபிகா.

    ஏற்கனவே நந்திதா மஹ்தானி உள்ளிட்ட சில அழகிய பெண்களுடன் ரன்பீர் சுற்றி வந்தபோது அதை தீபிகா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், கேத்ரீனா இடையில் வந்ததை அவரால் ஜீரணிக்கவே முடியவி்ல்லையாம்.

    அதே நேரத்தில் கேத்ரீனாவுக்கும் ரன்பீர் காய்ச்சல் மிகவும் அதிகமாகிவிடவே, போபாலில் அவர் சூட்டிங்கில் இருந்த இடத்துக்கே போய் 2 வார காலம் டேரா போட்டுவிட்டு வந்துள்ளார். இதற்காக தனது சூட்டிங்குகளை எல்லாம் கேத்ரீனா கேன்சல் செய்திருக்கிறார். இது தெரியவந்தபோது மிகவும் சூடாகிப் போய் ரன்பீரை போனிலேயே நாலு வாங்கு வாங்கிவிட்டு உறவை வெட்டிக் கொண்டாராம் தீபிகா.

    சமீபத்தில் ஒரு பார்ட்டிக்கு வந்த ரன்பீரும் தீபிகாவும் ஒருவரை ஒருவரை பார்த்துக் கொள்வதைக் கூட தவிர்த்துவிட்டதோடு ஆளுக்கு ஒரு மூலையில் போய் அமர்ந்து கொண்டனராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X