பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டதன் பின்னணி!

By Shankar

Manirathnam
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் படமாக எடுக்கப்போகிறார் என்று செய்திகள் வெளியானதும், இதை நினைத்து மகிழந்தவர்களுக்கு சமமாக வருத்தப்பட்டவர்களும் இருந்தார்கள்.

காரணம் கல்கியின் இந்த காவியம் மீது அவர்கள் கொண்டிருந்த அபிமானம். இப்போது வருத்தப்பட்டோருக்கு சற்று நிம்மதி. கதை தப்பித்ததே என்று!!

சரி... ஏன் இந்தக் கதை படமாவது சந்தேகத்துக்கிடமானது, அதுவும் விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்திருந்த நிலையில்?

முக்கிய காரணம் ஒரு நடிகர் மற்றும் பட்ஜெட். இந்தக் கதையில் தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினாராம் ஒரு முன்னணி நடிகர். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையாமல் போகவே, "படத்தில் நான் இல்லை. மீதியுள்ளவர்களை வைத்து, என்னதான் மணிரத்னம் சிறப்பாக எடுத்தாலும் 100 கோடியை எடுத்துவிட முடியுமா?யோசிங்க", என பற்ற வைக்க, முதல்போட முன் வந்தவர்கள் பின்வாங்க ஆரம்பித்துவிட்டனராம்.

ரஜினி அல்லது கமல் நடிப்பதாக இருந்தால் ரூ 100 கோடிக்கு மேலும் முதலீடு செய்ய நாங்கள் தயார். இன்னொரு ராவணன் மாதிரியாகிவிடக்கூடாது, என அட்வைஸும் செய்ய, யோசித்த மணிரத்னம், இப்போதைக்கு ஒரு கமா போட்டு நிறுத்தி வைத்துள்ளாராம். கமா முற்றுப்புள்ளியாகுமா தெரியவில்லை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X