Don't Miss!
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
துண்டு துக்கடா வேஷமா.. ஆளை விடுங்க! - சோனியா அகர்வால்
எந்தப் படமாக இருந்தாலும் ஹீரோயினுக்கு சமமான அல்லது முக்கியத்துவம் மிக்க வேடமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன். சும்மா துண்டு துக்கடா வேடங்களில் நடிக்க மாட்டேன், என்கிறார் சோனியா அகர்வால்.
இயக்குநர் செல்வராகவனை திருமணம் செய்த பிறகு நடிப்புக்கு தற்காலிகமாக முழுக்குப் போட்ட சோனியா அகர்வால், விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
சிம்பு நடிக்கும் வானம் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இதில் பிரகாஷ் ராஜ் ஜோடி அவர்.
அடுத்து ஒரு மலையாளப் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. செய்திகளும் வெளியாகின. ஆனால் அவற்றை மறுத்துள்ளார் சோனியா. அவர் கூறுகையில், "நான் மலையாளத்தில் மம்முட்டியின் படத்தில் கவுரவ வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது தவறான. சில காரணங்களுக்காக அந்தப் படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். தமிழில் இப்போது வானம் படத்தில் நடித்துக் கொண்டுள்ளேன்.
எந்த மொழியாக இருந்தாலும் எனக்கும் முக்கியத்துவம் உள்ள வேடமாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வேன். துண்டு துக்கடா வேடங்கள் வேண்டாம். எண்ணிக்கை எனக்கு முக்கியமில்லை," என்றார்.