Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஷூட்டிங்கின்போது காதலருடன் நடிகை ஓட்டம்-போலீஸில் தயாரிப்பாளர் புகார்
அந்த நடிகை மீது பட அதிபர் போலீசில் புகார் செய்து இருக்கிறார்.
இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் படம், 'கண்டேன்.' இந்தப் படத்தின் கதாநாயகிகளில் ஒருவராக நிம்மி என்பவர் நடித்து வந்தார்.
ஹைதராபாத் விமான நிலையத்தில் 2 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அந்த 2 நாட்களும் நிம்மி படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார்.
மூன்றாவது நாள் படப்பிடிப்பின்போது, நிம்மியை காணவில்லை. படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. நிம்மி இல்லாததால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
விசாரித்ததில், நிம்மி தன் காதலருடன் ஓடிப்போனது தெரியவந்தது. படப்பிடிப்பு குழுவினர் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அவர் ஓட்டம் பிடித்ததால் படத்தின் இயக்குநர் முகிலும் தயாரிப்பாளரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து ஹைதராபாத் போலீசில் தயாரிப்பாளர் புகார் கொடுத்துள்ளார். நிம்மிக்கு ஒரு நாளைக்கு ரூ 10 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டதாகவும், 2 நாட்கள் நடித்ததற்கு ரூ 20 ஆயிரம் பெற்றுக் கொண்ட அவர் ஓடிப்போனதால், படத்தின் தொடர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.
நிம்மியைத் தேட போலீசார் முயற்சித்து வருகின்றனர்.