Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகர் ஷைனி என்னைக் கற்பழிக்கவில்லை-வேலைக்காரப் பெண் பல்டி
சில மாதங்களுக்கு முன்பு இந்தித் திரையுலகைக் கலக்கிய விவகாரம் இது. நடிகர் ஷைனி அகுஜா வீட்டில் வேலை பார்த்து வந்த பெண், தன்னை ஷைனி கட்டாயப்படுத்தி கெடுத்து விட்டார் என போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து ஷைனி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது பல்டி அடித்துள்ளார் அந்த வேலைக்காரப் பெண். தன்னை ஷைனி வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்ட பெண் பேச்சைக் கேட்டுத்தான் ஷைனி மீது நான் பொய்யான புகாரைக் கூறினேன். ஷைனி என்னைக் கற்பழிக்கவில்லை என இந்த வழக்கை விசாரித்து வரும் விரைவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் அவர்.
செப்டம்பர் 3ம் தேதி கோர்ட்டில் இந்த வாக்குமூலத்தை அவர் அளித்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தை பிறழ் சாட்சியாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவருக்கு தண்டனை கிடைக்கும் எனவும் தெரிகிறது.
செப்டம்பர் 15ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.