Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Sports ராசியே கிடையாது.. ருதுராஜ் சதமடித்தால் சிஎஸ்கே தோல்வி உறுதி.. இப்படி நடப்பது 2வது முறையாம்!
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கிரிக்கெட் சூதாட்டத்தில் நீத்துவுக்குத் தொடர்பு?
நீத்து சந்திராவுக்கும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிக்கியுள்ள பந்து வீச்சாளர் முகம்மது ஆசிபுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது.
ஆனால் இதை நீத்து மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது சார்பில் அவரது பிஆர்ஓ பார்கவாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட முறையில் ஆசிப் அல்லது எந்த பாகிஸ்தான் வீரரையும் நீத்துவுக்குத் தெரியாது. தேவையில்லாமல் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் நீத்துவின் பெயரை இழுக்கின்றனர். அவர் மீதான புகார்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது.
ஆசிப் எப்படி இருப்பார் என்பது கூட நீத்துவுக்குத் தெரியாது. இந்த செய்தி வெளியானதும் நான் போய் நீத்துவைப் பார்த்தேன். அப்போது அவரிடம் முகம்மது ஆசிப்பின் இன்டர்நெட் படத்தைக் காட்டி இவருடன்தான் உங்களை இணைத்துப் பேசுகிறார்கள் என்றேன். அப்போதுதான் முதல்முறையாக ஆசிபின் முகத்தையே அவர் பார்த்தார் என்று கூறியுள்ளார்.
இந்தியில் பிரபலமாகி வரும் நீத்து தமிழிலும் தீராத விளையாட்டுப் பிள்ளை, யாவரும் நலம் என நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.