Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
அபிஷேக் கணவராக வாய்த்தது போன ஜென்ம புண்ணியம்! - உருகும் ஐஸ்
அபிஷேக் பச்சன் எனது கணவராக வாய்த்தது நான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.
குஜாரிஷ் படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் ஐஸ்வர்யா ராய் கவர்ச்சியாக நடித்ததாகவும், இதனால் அபிஷேக் பச்சன் வருத்தப்பட்டதாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன.
இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "என் கணவர் அபிஷேக் பச்சன் சொக்கத் தங்கம். நான் போன பிறவியில் செய்த புண்ணியத்தால்தான் அவர் எனக்கு கணவராக வாய்த்துள்ளார். திருமணத்துக்கு பிறகு நிறைய படங்களில் நடித்து விட்டேன். எல்லா படங்களிலுமே நல்ல கேரக்டர்கள் கிடைத்தன.
இந்த அளவுக்கு நான் வளர காரணம் என் கணவர் அபிஷேக்தான். அவர் சுதந்திரம் கொடுத்ததால்தான் இதையெல்லாம் சந்திக்க முடிந்தது. சினிமாவில் நடிப்பதற்கு அவர் மட்டும் தடை போட்டிருந்தால் வீட்டில் முடங்கிக் கிடந்திருப்பேன்.
சினிமாவில் கதாநாயகிகள் சந்திக்கும் பிரச்சினைகள் எல்லோருக்கும் தெரியும். என்னை பொறுத்தவரை எனக்குள்ள எல்லையைத்தெரிந்து வைத்துள்ளேன். அதை ஒருபோதும் மீற மாட்டேன். என் கணவருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு என்று செய்திகள் வந்தன.
குஜாரிஷ் படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் நான் நெருக்கமாகவும், கவர்ச்சியாகவும் நடித்து இருப்பதாக வதந்தி பரப்பினர். அதனால்தான் அபிஷேக் பச்சன் என்மேல் கோபமாக இருப்பதாகவும் பேசினர். எங்களுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் புரளி கிளப்பினர். அதை எல்லாம் பார்த்து வருத்தப்பட்டேன்.
இதுபோன்ற செய்திகளால் நடிகைகளின் குடும்ப வாழ்க்கை கேள்விக் குறியாவது சகஜம்தான். என் மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா, கணவர் அபிஷேக் மூவரும் சினிமாவில் இருப்பதால் என்னை நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர். அபிஷேக் குடும்பம் சினிமா உலகில் பிரபலமானது. அந்த குடும்பத்துக்கு கெட்ட பெயர் வரும்படி நடந்து கொள்ளமாட்டேன்...", என்றார்.