நயன் கையில் பிரபு தேவா டாட்டூ!

பிரபு தேவா எங்கிருக்கிறார் என்று தெரியாது என கற்பூரம் அடிக்காத குறையாகச் சொல்கிறார் சுந்தரம் மாஸ்டர்... (விட்டா உங்க கையிலேயேகூட கற்பூரம் கொளுத்திவிடுவார்!).
ஆனால் திருமணம் நடந்ததா இல்லையா என்பதை மட்டும் தெளிவாகச் சொல்லமாட்டேனென்று அடம் பிடிக்கிறார் மனிதர்.
இந் நிலையில் ஆதவன் படப்பிடிப்பில் இருந்தபோது ஒரு டாட்டூ கலைஞரை வரவழைத்த நயன்தாரா, தனது கையில் 'பிரபு' என டாட்டூ வரைந்து கொண்டாராம். இதில் P என்ற எழுத்து மட்டும் ஆங்கிலத்தில். மற்ற இரு எழுத்துக்களும் தமிழில் வருமாறு வரைந்து கொண்டாராம் (தமிழ் உணர்வாளர்கள் கவனிக்க!).
இதற்கு முன்பே ஒருமுறை ஹைதராபாத்தில் டாட்டூ கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நயனிடம், 'டாட்டூ வரைந்து கொள்கிறீர்களா மேடம்' என கடைக்காரர்கள் கேட்க, 'ஓயெஸ்... பிரபுன்னு வரைங்க' என்றே சொன்னாராம்.
இந்தத் தகவலை சொல்லிக் கொண்டிருந்த நயனுக்கு நெருக்கமான பிஆர்ஓவிடம், சக நிருபர் கடுப்பாக சொன்னது... 'உண்டு இல்லை... நிஜம் பொய் இதுல ஏதாவது ஒண்ணொ சொல்லித் தொலைங்கய்யா... இன்னும் நிறைய இருக்கு எழுத!'


Click it and Unblock the Notifications











