Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிரியாமணியின் பாய்பிரண்ட் யார்?
ஒரு நடிகையுடன் ஒருவரை இணைத்து வதந்தி கிளம்புவது வழக்கம். இப்படித்தான் இதற்கு முன்பெல்லாம் வதந்திகள் வரும். ஆனால் பிரியாமணியுடன் மூன்று நடிகர்களை இணைத்து இப்போது வதந்தி கிளம்பி வருகிறது.
பிரியாமணி நடிக்கும் படங்களை விட அவர் குறித்த வதந்திகள்தான் இப்போதெல்லாம் நிறைய வருகிறது.
தமிழ் நடிகர் விஷால், தெலுங்கு நடிகர் தருண், மலையாள நடிகர் பிருத்விராஜ் என மொழிக்கு ஒருவராக மூன்று நடிகர்களுடன் பிரியாமணியை இணைத்து காதல் வதந்திகள் ரெக்கை கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றன.
விஷாலுடன் அவரை இணைத்து ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்க, மறுபக்கம் தருணின் நெருங்கிய தோழி பிரியா மணி என்கிறார்கள். அதேசமயம், பிருத்விராஜுடன் இணைத்து நீண்ட காலமாகவே வதந்திகள் வந்தபடி உள்ளன.
ஆனால் எல்லா வதந்திகளையும் சிரித்தபடி கேஷுவலாக எதிர்கொள்கிறார் பிரியா மணி. அனைவருமே எனக்கு நல்ல நண்பர்கள். அதிலும், பிருத்விராஜின் அம்மாவும், எனது அம்மாவும் நீண்ட கால தோழிகள். எனவே எனக்கு சிறு வயதிலிருந்தே பிருத்விராஜை நன்றாகத் தெரியும். இருவரும் ஒன்றாகவும் நடித்துள்ளோம், அவ்வளவுதான் என்று கூறி சிரிக்கிறார்.
ஆனால் தருண், பிரியாமணிக்கு ஒரு கார் வாங்கிக் கொடுத்திருப்பதாக ஒரு சீரியஸான வதந்தி தெலுங்குத்
திரையுலகில் வேகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
எந்த 'வீரனைப்' பார்த்து 'எனக்கு ஒன்ன ரொம்பப் பிடிக்குண்டா' என்று நிஜமாக சொல்லப் போகிறாரோ முத்தழகி..!