Don't Miss!
- News நிர்மலா கிட்ட காசு இல்லை.. அப்ப தமிழிசையிடம் பணமிருக்கா? நிதியமைச்சர் மீது பாய்ச்சல்? யார்னு பாருங்க
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மங்காத்தா கைவிடப்பட்டதா?-பதறிய வெங்கட் பிரபு
அஜீத், திரிஷா ஜோடியாக நடிக்கும் படம் மங்காத்தா. வெங்கட்பிரபு இயக்குகிறார். இது அஜீத்தின் 50-வது படம். தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு பண பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதனால் படத்தை கைவிட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
இதுபற்றி இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் கேட்ட போது, "மங்காத்தா படம் கை விடப்பட்டதாக வெளியான செய்தி என்னை மிகவும் பதற வைத்தது. படப்பிடிப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாம் சுமூகமாக இருக்கும் நிலையில் இப்படியொரு பிரச்சினையை கற்பனையாக கிளப்பியுள்ளது சங்கடப்படுத்துகிறது. பாங்காக்கில் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்திருக்கிறோம்.
சென்னையில் தற்போது மும்பை தாராவி போன்ற செட் போட்டு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. மழையால் அரங்கு சேதமாகி படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. ஒருநாள் படப்பிடிப்பை ரத்து செய்தோம். வசன காட்சிகள் பெரும்பகுதி படமாக்கப்பட்டு விட்டன.
எதற்காக இந்த மாதிரி செய்திகள் பரவுகின்றன என்றே புரியவில்லை", என்றார்.