Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
நயனுடன் பிணக்கு: பிரபுதேவாவின் புதுக்காதலி ஆயிஷா?
வில்லு படத்தில் நடித்ததிலிருந்து பிரபு தேவா - நயன்தாராவுக்கிடையே காதல் பற்றிக் கொள்ள, அது தாலி கட்டாமலேயே குடித்தனம் நடத்தும் அளவுக்கு 'டெவலப்' ஆகிவிட்டதாக செய்திகள் வந்தன.
இதைத் தொடர்ந்து ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகளுடன் உள்ள பிரபுதேவா குடும்பத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. இன்னொரு முறை என் கணவருடன் பார்த்தால் நயன்தாராவை உதைப்பேன் என்று பிரபுதேவா மனைவி ரம்லத் பத்திரிகைகளுக்கு ஆவேசப் பேட்டி கொடுக்க, பயந்துபோன நயன்தாரா, சென்னைக்கு வருவதையே குறைத்துக் கொண்டார்.
இதை இயக்குநர் ரவிக்குமார் போன்றவர்களே கவலையுடன் சொல்லத் தொடங்கிவிட்டனர். இன்னொரு பக்கம் பெரிய நடிகர் ஒருவரும் நயனுக்கு புத்திமதி சொன்னாராம். முதலில் இதைப் புறக்கணித்த நயன், இப்போது 'தலைவர் சொன்னா கேட்டுக்கறேன்' என்று சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் பிரபுதேவாவுக்கும் பிரபல இந்தி நடிகை ஆயிஷா தாகியாவுக்கும் இடையே புது நட்பு மலர்ந்திருப்பதாகவும், இருவரும் மிக நெருங்கிப் பழகுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நெருக்கம் பற்றி கேள்விப்பட்ட நயன்தாரா, பிரபுதேவாவுடன் பேசுவதைக் கூட நிறுத்திக் கொண்டதாகக் கூறுகிறார்கள்.
சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியாகி, இந்தியில் இப்போது சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் வாண்டட் பட நாயகிதான் இந்த ஆயிஷா தாகியா என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிஷாவுக்கு சமீபத்தில் தான் திருமணமானது.