Don't Miss!
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆர்யாவை தேடி வந்த நிலா!
கோலிவுட்டில் அவ்வப்போது பல காதல்கள் உருவாகும், சில காதல்கள் உறுதியாக இருக்கும். சிலகாதல்கள் உதிரிப் பூக்களாகிப் போகும். இந்த வகையில் ஆர்யா, நிலா காதலை எந்த 'டேக்சானமி'யில் சேர்ப்பது என்று தெரியவில்லை. அவர்களின் அனாட்டமி இன்னும் புரியாத புதிகராக இருப்பதே இதற்குக் காரணம்.
இருவரும் ஒரு படத்திலும் இணைந்து நடித்ததில்லை. வெளிநாட்டு கலை நிகழ்ச்சிக்காக போன இடத்தில் பற்றிக் கொள்ள, நட்பாகி இப்போது காதலில் கசிந்துருகிக் கொண்டிருக்கின்றனர்.
ஆர்யாவைப் பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லையாம் நிலாவுக்கு. போனிலாவது பேசி விட வேண்டும். இல்லாவிட்டால், இருப்பு கொள்ளாதாம்.
இப்படி காதல் ஜூரம் படு வேகமாக எகிறிக் கொண்டிருந்த நேரம் பார்த்து பாலா அவர் பாட்டுக்கு நான் கடவுள் ஷூட்டிங்கை தேனி பக்கம் வைத்து விட்டார். இதனால் இரு பறவைகளும் பிரிய வேண்டியதாயிற்று.
இருந்தாலும் நிலாவாவது, விடுவதாவது. அவ்வப்போது மதுரைக்குப் பறந்து வந்து அங்கிருந்து ஆர்யாவுக்கு போனைப் போட்டு, அவர் அப்படியே தேனியிலிருந்து தேனீயின் வேகத்தில் விரைந்து வந்து நிலாவைப் பார்த்து குசலம் விசாரிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது.
அப்படி ஒரு கதை சமீபத்தில் நடந்துள்ளது. நிலாவுக்கு ஆர்யா போன் போட்டு மதுரைக்கு வருமாறு கூற, அன்று இரவே நிலாவும் மின்னல் வேகத்தில் மதுரைக்கு விரைந்தார். பின்னர் அங்குள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்கிய நிலா, ஆர்யாவுக்கு தாக்கலைப் போட, அவரும் 'பாலாண்ணனிடம் ஒன்டே பெர்மிஷன்' வாங்கிக் கொண்டு மதுரைக்கு ஓடினார்.
அன்று இரவு ஒரே அறையில் இருவரும் தங்கியிருந்தார்களாம். மறு நாள் கோழி கூவிய பிறகுதான் வெளியே வந்தனராம். பிரிய முடியாமல் பிரிந்து தத்தமது ஸ்பாட்டுகளுக்குப் பறந்தனராம்.
இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அவஸ்தையோ?