இயக்குநரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக செய்தி-டென்ஷனில் சமந்தா

கௌதம் மேனனின் தெலுங்கு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிறப்பாக நடித்து அசத்தியவர் நடிகை சம்ந்தா. இவரைத்தான் அஜீத்துடன் நாயகியாக போட்டு துப்பறியும் ஆனந்த் படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார் மேனன். ஆனால் அப்படம் டிராப் ஆகவே தமிழுக்கு வரும் வாய்ப்பு சமந்தாவுக்குத் தள்ளிப் போனது.
இருந்தாலும் சமந்தாவை விட்டு விடாத கெளதம் மேனன் தற்போது அவரை தனது படத்தில் மீண்டும் நடிக்க வைத்து தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார். 'நீதானே என் பொன்வசந்தம்' என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சமந்தா.
இந்நிலையில் சமந்தா யாரோ ஒரு பிரபல இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பத்திர்க்கைகளில் செய்தி வெளியாகின. அட என்னடா இது இப்படி எழுதியிருக்கிறார்களே என்று சமந்தா கடுப்பாகிவிட்டாராம்.
இதையடுத்து தன்னைப் பற்றி இப்படியெல்லாம் எழுதிய மீடியா அதிலும் குறிப்பாக தமிழ் மீடியாக்காரர்களிடம் பேசுவதையே நிறுத்திவிட்டாராம்.
எத்தனை நாளைக்கு இப்படி தலைமறைவாக இருக்க முடியும் சமந்தா?


Click it and Unblock the Notifications











