Don't Miss!
- News தோல்வி உறுதி என்றதுமே "ஒப்பாரி" பாட ஆரம்பிச்சிட்டாங்க.. பாஜக வேட்பாளர்களை விமர்சித்த கி.வீரமணி!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
சும்மா கிசுகிசு பரப்பாதீங்க, உலகக் கோப்பை ஆட்டம் பாதிக்கும்! - தீபிகா
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற யுவராஜ் சிங்கின் சிறப்பான ஆட்டமும் உதவியது.
அந்தப் போட்டியின் முடிவில் யுவராஜ்சிங் அளித்த பேட்டியில், 'கிரிக்கெட் ஆட்டத்தில் எனக்கு நெருக்கடி வரும் போது ஒருவரை ஞாபகப்படுத்துவேன். உடனே உற்சாகம் கிளம்பும். அவர் யார் என்பதை இறுதியில் சொல்கிறேன்,' என்றார்.
யுவராஜ்சிங் ஞாபகத்தில் வருபவர் யார் என்று பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த நபர் தீபிகா படுகோனே என்று மும்பை பத்திரிகைகள் கிசுகிசு வெளியிட்டுள்ளன. அவரை மனதில் வைத்து தான் யுவராஜ்சிங் பேசியதாக கூறப்பட்டது.
இதுபற்றி தீபிகா படுகோனே கூறுகையில், "யுவராஜ்சிங் எனக்கு நல்ல நண்பர். அவரிடம் பேசியே பல நாட்கள் ஆகி விட்டன. கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றிக்காக அவர் போராடி வருகிறார். அவரையும் என்னையும் இணைத்து பேசுவது வருத்தம் அளிக்கிறது.
எங்களுக்குள் காதல் இல்லை. அவர் ஞாபகத்தில் வருபவர்கள் பெற்றோராகக் கூட இருக்கலாமே. அல்லது சச்சின் டெண்டுல்கராக இருக்கலாம். நான் ஞாபகத்தில் வரும் அளவுக்கு எங்களுக்குள் நெருங்கிய உறவு இல்லை. இதுபோன்ற கிசுகிசுக்கள் யுவராஜ்சிங் மனிதை காயப்படுத்தும். இதனால் நன்றாக விளையாட முடியாமல் போகலாம்.
இந்திய அணியை ஜெயிக்க வைத்து உலக கோப்பையை அவர் கொண்டு வர வேண்டும். அதை சச்சினுக்கு காணிக்கையாக்க வேண்டும். அதுவே இப்போதைய பிரார்த்தனை," என்றார் அவர்.