Don't Miss!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- News டார்கெட் நம்பர் 2.. தமிழ்நாட்டில் பாஜக இறக்கிய ஆபரேஷன்.. இந்த 10 தொகுதிகளில்தான் ஆட்டமே மாற போகுதாம்
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வீட்டைவிட்டு ஓடிப்போய் உதவி ஒளிப்பதிவாளரை மணந்த நடிகை பூங்கொடி!
மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் மற்றும் மிளகா படங்களில் நடித்த நடிகை பூங்கொடி, மலையாள ஒளிப்பதிவாளர் வினுவை மணந்தார்.
மலையாள டி.வி. தொடர்களில் நடித்து வந்த பூங்கொடி, தமிழில் வீரமும் ஈரமும் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ராசுமதுரவன் இயக்கிய மாயாண்டி குடும்பத்தார் படத்தில் தருண் கோபி ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
பூங்கொடிக்கும் உதவி ஒளிப்பதிவாளர் வினு என்கிற வினோத்துக்கும் காதல் மலர்ந்தது. வினோத் மிளகா படத்தில் பணியாற்றியவர். திருப்பரங்குன்றத்தில் இதன் படப்பிடிப்பு நடந்த போது இருவரும் நெருக்கமானார்கள். இவர்கள் காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் பூங்கொடி காதலில் உறுதியாக இருந்தார்.
வினோத்தைதான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக கூறினார். அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இதனால் பூங்கொடி வீட்டை விட்டு ஓடினார்.
வினோத்தும் பூங்கொடியும் திருவனந்தபுரத்தில் உள்ள கரமனை என்ற இடத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமானதை தொடர்ந்து சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்துள்ளார் பூங்கொடி.