twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகா தீரா வெற்றியும் ஒரு அப்பாவி இயக்குநரின் புலம்பலும்!!

    By Shankar
    |

    வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழி சினிமாவிலும் அவ்வப்போது நிஜமாகி வருகிறது.

    கல்யாண்குமார், தேவிகா, நம்பியார் நடித்து கிளாசிகல் ஹிட்டடித்த ஸ்ரீதரின் 'நெஞ்சம் மறப்பதில்லை'யை அவ்வளவு எளிதில் நாம் மறந்திருக்க மாட்டோம். நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் அழகாக இணைத்து காலம் போற்றும் பாடல்களுடன் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த படம்.

    இந்த 'நெஞ்சம் மறப்பதில்லை'யை தூசி தட்டி எடுத்து ஆங்காங்கே பட்டி, டிங்கரிங் பார்த்து தொழில்நுட்பத்தைத் தூவி அக்கட பூமியில் வெளியான அவியல் படம்தான் 'மஹதீரா'. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவின் விறுவிறு ஆக்ஷனும், காஜல் அகர்வாலின் கிளாமரும் படத்தை உச்சத்தில் வைத்துவிட்டது.

    இந்தப் படத்தை தயாரித்த 'கீதா ஆர்ட்ஸ்' அல்லு அரவிந்த் ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் என்றாலும் இப்போதுதான் உண்மையில் அவருக்கு அறிமுகம் தேவை!!

    இந்த அல்லு, சிரஞ்சிவியின் மைத்துனர். ராம்சரணின் தாய்மாமா. தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜூனின் அப்பா. இந்தி 'கஜினி'யை வாங்கி வெளியிட்டவர். தமிழில் மாப்பிள்ளை உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்தவர். இவர்தான் இந்தச் செய்தியின் நாயகன்.

    தங்கச்சி மகனான ராம்சரணை நாயகனாக்க நல்ல சென்சேனல் கதைகளைத் தேடினார். தெலுங்கிலோ காரம் பிளஸ் கலாட்டா கதைகளை கேட்டு காதில் ரத்தம் வராதக் குறையாக சென்னை வந்தார்.

    அப்போது அவருக்கு சிக்கியதுதான் 'மஹதீரா' கதை. நாற்பது பிளஸ் வயதுடைய ஒரு இயக்குனர் அவர். அல்லு அரவிந்தின் அலைச்சல் மற்றும் தேவை அறிந்து அணுகினார். இவர் சொன்ன இந்த நெஞ்சம் மறப்பதில்லை டைப் 'ஒன் லைன்' பிடித்துப்போக முழு கதையையும் சொல்லச் சொன்னார் அல்லு. சிரஞ்சீவியிடம் கதையை விளக்குவதற்கு வசதியாக இயக்குனரின் ஸ்க்ரீன்பிளே முழுவதையும் டேப் செய்திருக்கிறார்.

    நாட்கள் ஓடின... ஆனால் அரவிந்திடமிருந்து அந்த அப்பாவி இயக்குனருக்கு எந்த பதிலும் வரவில்லை. சரி பிடிக்கவில்லை போலிருக்கு என மனதை தேற்றிக்கொண்டார் இயக்குனர்.

    இதற்கிடையில் தான் சொன்ன கதையையே வேறொரு இயக்குனரை வைத்து படம் எடுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டாக்கியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்த இயக்குநருக்கு செம ஷாக். தான் சொன்ன திரைக்கதையை காட்சி மாறாமல் காப்பி அடித்திருப்பதை கண்டு தியேட்டரிலேயே குமுறி குமுறி அழுதார்.

    அரவிந்ததை அணுகினார். 'ஆமாங்க. உங்களால இவ்வளவு பெரிய படத்தை எடுக்க முடியுமா? அதான் நாங்களே எடுத்துட்டோம்' என்று அசால்டாக பதிலளிக்க, படத்தின் இயக்குனர் ராஜமவுலியிடம் சென்றார். 'சிரஞ்சீவி பக்கம் இருந்து பிரஷர். அதான் பண்ணினேன்' என அவரும் நழுவினார்.

    கடைசியாக ஃபெப்சியிடம் முறையிட, புகார் உண்மை என உறுதி செய்யப்பட்ட பிறகும் கிணற்றில் போட்ட கல்லானது இயக்குனரின் முறையீடு. தமிழிலோ, கன்னடத்திலோ இந்தப் படத்தை பண்ணும்போது அந்த ரைட்ஸ் உங்களுக்குத்தான் என தாமதமாக பதில் வந்தது அரவிந்த் தரப்பிடம் இருந்து.

    சரி, இதாவது கிடைத்ததே என மனதை தேற்றிக் கொண்டவருக்கு, 'மஹதீரா' தமிழில் 'மாவீரன்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரெட் ஜெயண்ட் மூலம் வெளிவர உள்ளதை அறிந்தும் பயம் பிளஸ் பதட்டம் தொற்றிக் கொள்ள, இப்போது வாய்விட்டு புகார் சொல்லக் கூட முடியாமல், எஃப்.எம். ஒன்றில் ஆர்.ஜே.யாக பணியாற்றிக் கொண்டுள்ளாராம் அந்த அப்பாவி இயக்குநர்.

    சினிமா அப்பாவிகளை தோற்கடிக்கும். 'அடப்பாவி'களையே வெற்றிபெற வைக்கும். என்பது இதனால் அறியப்படும் நீதி!!

    English summary
    Mahadheera, the blockbuster Telugu movie's original story has been lifted from a poor Tamil directors imagination and the producer of the film hasn't even gave any monetary benefit to the original creator.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X