Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Technology தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கண்டுகொள்ளாமல் விட்ட படக்குழு... கோபத்தில் விழா பாதியில் வெளியேறிய ஹீரோயின்
சென்னை: பாடல் வெளியீட்டு விழாவில் கண்டுகொள்ளாததால் ஹீரோயின் திடீரென்று வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹீரோவாக நடித்து வருகிறார், அந்த இசை அமைப்பாளர். அவர் நடிக்கும் படத்துக்கு இசை மேதை மியூசிக் அமைத்திருக்கிறார்.
முன்னாள் பத்திரிகையாளர் இயக்கி இருக்கும் அந்தப் படத்தில் மலையாள ஹீரோ ஒருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் போன மாதமே முடிந்துவிட்டது.
தர்பார் படத்திற்கு தடை கோரிய வழக்கு.. லைக்கா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
அரசியல் பிரமுகர்கள்
இதன் பாடலை நேற்று வெளியிட்டார்கள். விழாவுக்கு அரசியல் பிரமுகர்கள் வந்திருந்ததால் தயாரிப்பாளர், அவர்களை கவனிப்பதிலேயே குறியாக இருந்தார்.
பாராட்டு
விழாவில் பேசியவர்களில், இயக்குனர் உட்பட சிலர், அரசியல்வாதிகளை அதிகம் கண்டுகொள்ளவில்லை. இசை மேதையையும் இமயத்தையுமே பாராட்டிப் பேசினார்கள்.
ரம்மியமான நாயகி
இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் படத்தின் நாயகி. இதற்காகவே கேரளாவில் இருந்து அவசரம் அவசரமாக வந்தாராம் இரண்டு பெயர்களை சேர்த்து வைத்திருக்கும் அந்த
ரம்மியமான ஹீரோயின்.
மேடைக்கு
கூட்டத்தினரோடு அமர்ந்திருந்த அவரை, விழா தொடங்கிய பின், திடீரென ஞாபகம் வந்தவர்களாக அழைத்தனர் மேடைக்கு. அதுவும் இயக்குனர் ஞாபகப்படுத்திய பிறகு.
கோபமாக எழுந்து
பிறகு அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நடிகை, ஏன்டா வந்தோம் என்று, திடீரென கோபமாக எழுந்து சென்று விட்டாராம் வெளியே.