Don't Miss!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சும்மாவே ஆடுவா.. இனி என்னென்ன பண்ணப் போறாளோ.. வாரிசு நடிகையால் கலக்கத்தில் இருக்கும் பெரிய குடும்பம்
பெரிய வீட்டில் தங்கியுள்ள வாரிசு நடிகையால் அவரது குடும்பத்தினர் கலக்கத்தில் இருக்கின்றனர்.
சென்னை: பெரிய முதலாளி நிகழ்ச்சிக்கு முக்கியமான வாரிசு நடிகையும் ஒரு போட்டியாளராக சென்றுள்ளார். ஏற்கனவே அவரது குடும்ப பிரச்சினைகள் ஊரறிந்த கதை தான். நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னரும், அதை மீண்டும் மக்களிடம் ஞாபகப் படுத்தி விட்டுத் தான் நடிகை உள்ளே சென்றார்.
புறணி பேசுவதற்குப் பேர் போனது அந்த நிகழ்ச்சி. அதோடு, வீட்டிற்கு உள்ளே ஜாலியாக பேசிக் கொள்வதைக் கூட ஊதிப் பெரிதாக்குவதில் வல்லவர்கள். எப்படியும் வாரிசு வீட்டிற்குள் தனது குடும்ப விவகாரம் பற்றி பேசுவார். அது நிச்சயம் பெரிய விசயமாகும் என இப்போதே கவலைப்பட ஆரம்பித்துள்ளது அவரது பெரிய குடும்பம்.
திரையுலகில் தனக்கென தனி மரியாதையுடன் இருந்து வருபவர் நடிகையின் அப்பா. நடிகையின் சகோதரரும் நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின் இப்போது தான் வெற்றிப் படங்கள் கொடுத்து வருகிறார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க அவர் போராடி வரும் நிலையில், இப்படி நடிகை பெரிய முதலாளி நிகழ்ச்சிக்கு சென்றுள்ளாரே என்பது தான் அவர்களது மிகப்பெரிய கவலையே.
நிச்சயம் வீட்டிற்குள் இருந்தபடி தங்களது மானத்தை வாங்கி விடுவார் என்ற பயம் அவர்களுக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் எப்போது அவர் எலிமினேட் ஆவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக அவர்களிடையே உள்ளதாம். தங்களைப் பழி வாங்க இந்த நிகழ்ச்சியை அவர் ஒரு கருவியாகப் பயன்படுத்திவிடக் கூடாது என்பது தான் தற்போதைக்கு அவர்களது முக்கியக் கவலை.
நிச்சயம் நடிகை தன் தரப்பு நியாயங்களை இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் செண்டிமெண்டாக போட்டுத் தாக்குவார் எனத் தெரிகிறது. தந்தையும் அதற்கு நிச்சயம் விளக்கம் தருவார். என்னென்ன ரகசியங்கள் வெளிவரப் போகிறதோ என்பது தான் கோலிவுட்டில் இப்போது பேச்சாக உள்ளது.