ச்சே.. "அந்த" சினிமா குடும்பம் மேல் குவியும் புகார்.. வீடு தேடி வந்தவர்களை விரட்டிட்டாங்களே.. ஷாக்
சென்னை; சமீபத்தில் கோலிவுட் உலகில் விமர்சனத்தில் சிக்கி இருக்கும் குடும்பம் ஒன்று மேலும் ஒரு விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
அந்த சினிமா குடும்பம் மீது வரிசையாக பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. சினிமா துறையில் மிகவும் மதிப்பிற்குரிய குடும்பங்களில் அதுவும் ஒன்று.

அந்த குடும்பத்திற்கு என்று ஒரு நல்ல பெயர் இருந்தது. அந்த குடும்பத்தின் தலைவர் செல்லும் இடங்களில் எல்லாம் தன் குடும்பத்தின் பெருமையை பேச கூடியவர். எங்க குடும்பம் இப்படி.. நாங்க இப்படி எல்லாம் வாழ்ந்தோம்.
எங்கள் வீட்டில் இதெல்லாம் விதி. நாங்கள் இதை எல்லாம் செய்வோம் என்று மேடைகளில் எல்லாம் பேச கூடியவர் "சிடுமூஞ்சி" குடும்ப தலைவர்.
மோசமான குடும்பம் பெயர்: இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த குடும்பத்தின் பெயர் திடீரென் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளது. நன்றாக இருந்த பெயர் கெடுவதற்கு காரணம் அந்த குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர்தான். கிட்டத்தட்ட அந்த குடும்பத்தின் பினாமி என்று கூறலாம்.
அந்த நபர் சமீபத்தில் ஒரு படம்.. தயாரிப்பு.. அந்த படத்தின் வெளியீடு பற்றி பேசியதற்கு கோலிவுட்டே கண்டனம் தெரிவித்தது. ஆனால் அந்த குடும்பம் மட்டும் இதில் கருத்து சொல்லாமல்
மேலும் ஒரு புகார்: கோலிவுட் உலகில் விமர்சனத்தில் சிக்கி இருக்கும் அந்த குடும்பம் மேலும் ஒரு விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதன்படி அந்த குடும்பத்தை பேட்டி எடுக்க சமீபத்தில் ஒரு சேனல் நிர்வாகிகள் அங்கே சென்று இருக்கிறார்கள்.
காலை நேரத்தில் 11 மணி அளவில் சென்று இருக்கிறார்கள். வீட்டின் மூத்த பையன் அங்கே வந்து.. இண்டர்வியுவிற்கு எல்லாம் ரெடியா என்று கேட்டுள்ளார். அங்கே இருந்த சேனல் நிர்வாகிகளும் அதை ஆம் .. எல்லாம் ரெடி.. நீங்க வந்தா இன்டர்வ்யூ பண்ணிடலாம் என்று கூறியுள்ளனர்.
அப்போதுதான் அந்த ஹீரோ.. ஆர்வமாக வந்து.. என்ன பாஸ் சாப்டீங்களா? 11 மணி ஆகுதே என்று கேட்டுள்ளார். அதற்கு இவர்களோ.. நாங்கள் இன்னும் சாப்பிடவில்லை. இன்டர்வியூ முடித்து நேரடியாக லன்ச் சாப்பிடலாம்., இப்போது வேண்டாம். வேலை இருக்கும் என்றுள்ளனர்.
அதை கேட்ட ஹீரோ அப்படி பொங்கி.,. சாப்பிடமா என்ன வேலை.. சாப்பாடு முக்கியம். நீங்க சாப்பிடாம இன்டர்வியூ கிடையாது என்று அன்பாக கூறியுள்ளார். இவரின் அன்பை கேட்டு.. அப்படியே அங்கே இருந்த சேனல் நிர்வாகிகள் ஸ்டன் ஆகி உள்ளனர்.
அதோடு சரி உள்ளே சாப்பிட கூப்பிடுவார்கள்.. அட்லீஸ்ட் வராண்டாவில் உட்கார வைத்து சாப்பிட சொல்வார்கள் என்றுதான் அந்த 3 பேர் கொண்ட சேனல் நிர்வாகிகள் நினைத்துள்ளனர். ஆனால் அந்த ஹீரோ.. நீங்க என்ன பண்றீங்க.. பக்கத்துல இந்த ஹோட்டல் இருக்கு. சூப்பரா இருக்கும். நாங்க கூட அங்க அப்ப அப்ப வாங்கி சாப்பிடுவோம். சாப்பிட்டுட்டு வாங்க.. அப்பறம் பேசலாம் என்று விரட்டி விட்டு இருக்காங்க.
என்னடா இது அதிதீ தேவோ பாவ.. வந்தவருக்கு சாப்பாடு கொடுப்பது தானே நம்ம வழக்கம்.. இவங்க சாப்பாட்டை வெளியே சாப்பிட சொன்னது கூட ஓகே.. அப்படி சொல்ல போறவங்க.. பெரிய டயலாக் எல்லாம் விட்டு இருக்க கூடாதுன்னு கோபமாக அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











