படம் ரிலீஸ் ஆகுற நேரம் பார்த்து.. மாஜி கணவரை சீண்டிய "பேபி" நடிகை! கடைசியில் இப்படி மாட்டிக்கிட்டாரே
சென்னை: சரியாக படம் ரிலீஸ் ஆகும் நேரம் பார்த்து பிரபல நடிகை ஒருவர் தனது முன்னாள் கணவரை சீண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சினிமா உலகில் என்று இல்லை பொதுவாக விவாகரத்து என்பது தற்போது சகஜம் ஆகிவிட்டது. ஆசைப்பட்டு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் தங்களுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டு பிரியும் சம்பவங்கள் நடந்து இருக்கின்றன.
இது சினிமா உலகில் தற்போது அதிகம் நடந்து வருகிறது. முக்கியமாக காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பிரபல நடிகர், நடிகைகள் இப்படி டைவைர்ஸ் செய்வது அதிகரித்து உள்ளது.

சினிமா
நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்ட பலர் சமீப நாட்களில் தங்கள் இணையை பிரிந்து வாழ்வதாக அறிவித்தனர். இன்னும் சில பிரபல நடிகர், நடிகைகள் தாங்கள் பிரிய போவதாக அறிவித்து உள்ளனர். சமீபத்தில் திருமணம் செய்த ஒரு தம்பதி கூட பிரிவதற்கான முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சரியாக படம் ரிலீஸ் ஆகும் நேரம் பார்த்து பிரபல நடிகை ஒருவர் தனது முன்னாள் கணவரை சீண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரிலீஸ்
அதன்படி அந்த நடிகை சமீபத்தில் தனது கணவரை திருமணம் செய்தார். இவர்கள் முறையாக விவாகரத்து செய்ய விண்ணப்பம் செய்துள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வமாக இவர்கள் பிரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டனர். அந்த பேபி நடிகைக்கு இவரை தொடக்கத்தில் இருந்தே மிகவும் பிடிக்கும். இவர்கள் காதலித்து வந்த நிலையில், அந்த நடிகைதான் திருமணம் பற்றி பேசி இருக்கிறார். இந்த நிலையில்தான் திருமணம் முடிந்த சில மாதங்களில் இவர்களுக்குள் சண்டை வந்துள்ளது.

திருமணம்
முக்கியமாக இவர்களுக்குள் படத்தில் நடிப்பது தொடர்பாக சண்டை வந்துள்ளது. அந்த நடிகை பல்வேறு படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். முக்கியமாக கவர்ச்சியான காட்சிகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால் அந்த நடிகருக்கு நடிகை மீது கோபம் வந்துள்ளது. இப்படி எல்லாம் இனி நடிக்க கூடாது. சினிமாவில் நடிப்பது தவறு இல்லை. ஆனால் கவர்ச்சியாக நடிக்க வேண்டாம். நமது குடும்ப மரியாதை போய்விடும், என்று அறிவுரை வழங்கி இருக்கிறார்.

மோதல்
இந்த மோதலில் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். . இவர்கள் முறையாக விவாகரத்து செய்ய விண்ணப்பம் செய்துள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வமாக இவர்கள் பிரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் சினிமா உலகையே உலுக்கி உள்ளது. இந்த நிலையில்தான் அந்த நாயகி பட ப்ரோமோஷனுக்காக இந்த விவகாரத்தை பற்றி அடிக்கடி பேசுவதாக கூறப்படுகிறது. அதாவது தன்னுடைய படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களில் மட்டும் தனது கணவரை பற்றி அவர் அடிக்கடி பேசுவதாக கூறப்படுகிறது. அப்போதுதான் லைம் லைட்டில் இருக்கலாம் என்று இப்படி செய்கிறாராம். அவரின் படம் ஒன்று இந்த மாதம் வெளியாக உள்ள நிலையில், இப்போதே தனது கணவரை மோசமாக தாக்கி இணையத்தில் பல்வேறு பேட்டிகள் கொடுத்து வைரலாக்கி வருகிறாராம். இதன் மூலம் மீண்டும் தான் லைம் லைட்டிற்கு வரலாம் என்று நினைக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











