திருமண வாழ்க்கையும் போச்சு.. சினிமா வாய்ப்பும் போச்சு.. கடும் மனஉளைச்சலில் முன்னணி நடிகை!
சமீபத்தில் விவாகரத்து ஆகி ஹிட் படம் ஒன்றை கொடுத்த முன்னணி நடிகை அதன்பின் வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் கடுமையான மனஉளைச்சலில் இருக்கிறாராம்.
Recommended Video
சென்னை: சமீபத்தில் விவாகரத்து ஆகி ஹிட் படம் ஒன்றை கொடுத்த முன்னணி நடிகை அதன்பின் வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் கடுமையான மனஉளைச்சலில் இருக்கிறாராம்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகை அவர். முன்னணி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவர் சில மாதங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
ஆனால் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர் விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். வரிசையாக சில நல்ல படங்களில் நடித்தார்.

என்ன ஹிட்
முக்கியமாக கடைசியாக இவர் நடித்த மூன்று படங்களும் நல்ல ஹிட் அடித்தது. அதிலும் இவர் நடித்து ஒரு படம் பிளாக்பஸ்டர் வரிசையில் சேர்ந்து, பிற மொழிகளில் ரீமேக் கூட செய்யப்பட்டது. விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்றது.

என்ன படம்
இந்த படத்தின் வெற்றிக்கு பின் அந்த நடிகை ஹீரோயின் சப்ஜெக்ட் படம் ஒன்றில் நடித்தார். படமும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று, நல்ல வசூலை பெற்றது. ஆனால் படத்திற்காக விளம்பரம் செய்யப்பட்ட அளவிற்கு பெரிய வசூலை இது பெறவில்லை.

மிக மோசம்
அதேபோல் அவரின் நடிப்பும் இந்த படத்தில் கொஞ்சம் ஓவராக இருக்கிறது. தேவையில்லாமல் நிறைய விஷயங்களை படத்தில் சேர்த்து இருக்கிறார், கவர்ச்சி அதிகமாகிவிட்டது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது . இந்த படத்திற்கு பின் அவருக்கு வேறு எதிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

வாய்ப்பு இல்லை
ஆம் இந்த படத்திற்கு பின் அவருக்கு புது படம் எதிலும் நடிப்பதற்காக அழைப்பு வரவில்லை. இருந்த சில படங்களும் கைவிட்டு போய்விட்டது. முன்பு போல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடிக்க முடியவில்லை. பிற மொழி படத்திலும் வாய்ப்பு இல்லையாம்.

எல்லாம் போச்சு
இதனால் அந்த முன்னணி நடிகை தற்போது கடும் மனஉளைச்சலில் இருக்கிறாராம். திருமண வாழ்க்கையும் போய்விட்டது, இப்போது பட வாய்ப்பும் போய்விட்டதே என்று கடும் வருத்தத்தில் அவர் இருக்கிறார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











