காசு கொடுத்து ரசிகர் மன்றம் துவங்கச் சொல்லும் நடிகையின் தாய்
சென்னை: தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றங்களை துவங்குமாறு பணம் கொடுத்து ரசிகர்களை ஊக்குவித்து வருகிறாராம் வாரிசு நடிகையின் தாய்க்குலம்.
பக்கத்து மாநிலத்தில் இருந்து வந்த வாரிசு நடிகை தளபதி, வெளிச்ச நடிகர், சிறுத்தை, சண்டக்கோழி என்று அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகிலும் பெரிய ஹீரோ படம் ஒன்று சிக்கியுள்ளது. அதை அம்மணியும், அவரின் தாயான முன்னாள் நடிகையும் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். நடிகையின் பெயரில் சென்னையில் ரசிகர் மன்றம் துவங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றங்களை துவங்குமாறு தாய்க்குலம் ரசிகர்களை ஊக்குவித்து வருகிறாராம். மேலும் ரசிகர் மன்றங்களுக்கு ஆகும் செலவையும் தாய்க்குலமே ஏற்கிறாராம்.
மகளை எப்படியும் பெரிய நடிகையாக்கிவிட வேண்டும் என்பதில் தாய்க்குலம் அதிக கவனம் செலுத்துகிறார்.


Click it and Unblock the Notifications










