நடிகையுடன் உறவு..மனைவியிடம் வசமாக சிக்கிய அரசியல் பிரமுகர்.. விஷயத்தை மறைக்க கோடிக்கணக்கில் பேரம்!
சென்னை: நடிகையுடன் அரசியல் பிரமுகருக்கு இருந்த உறவு தெரியவந்ததால், விஷயத்தை மறைக்க கோடிக்கணக்கில் நடந்துள்ள பேரம் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சினிமாவில் இரண்டாவது நடிகையாகவே நடித்து வரும், இந்த நடிகை இப்போது முன்னணி நடிகைகளே வாய்ப்பு பிளக்கும் அளவுக்கு சொத்துக்களை வைத்துக்கொண்டு, மகாராணிப்போல வாழ்ந்து வருகிறார்.

சொகுசு வாழ்க்கை: ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள அந்த நான்கு எழுத்து நடிகைக்கு படங்களில் பெரியதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அமைச்சர் ஒருவரின் தயவால், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
தனிக்குடித்தனம்: அழகான க்யூட்டான இந்த நான்கு எழுத்து நடிகைக்கு சினிமா விழா ஒன்றில் அரசியல் பிரமுகர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து, அவருடன் பழகத் தொடங்கி உள்ளார். பின் நாளில் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகிப்போக, அந்த நடிகையுடன் தனிக்குடித்தனமே நடத்த தொடங்கிவிட்டார்.
பண பேரம்: அரசியல் பிரமுகரின் இந்த விவகாரம், அவரது மனைவிக்கு தெரியவர, அந்த நான்கு எழுத்து நடிகையை அழைத்து பேசிஉள்ளார். ஆனால், அந்த நடிகையோ வாழ்ந்தால் இவரோடுதான் வாழ்வேன் என்று சினிமா பாணியில் வசனம் பேச. டென்ஷனாகிப் போன அரசியல் பிரமுகரின் மனைவி விஷயம் வெளியில் வந்தால் குடும்பமானம் போய்விடுமே என்று இறங்கி வந்து கோடிக்கணக்கில் பேரம் பேசி உள்ளார்.
டாடா காட்டினார்: ஆரம்பத்தில் முடியாது முடியாது என்று மறுத்துவந்த அந்த நான்கு எழுந்து நடிகை, பணம் ஏற ஏற இதைவிட்டால், இனி சம்பாதிக்க முடியாது என தெரிந்து கொண்ட அந்த நடிகை, கிடைத்த வரைக்கும் லாபம் என பணத்தை வாங்கிக்கொண்டு அரசியல் பிரமுகருக்கு டாடா காட்டி விட்டார்.
பேரம் பேசி வாங்கிய அந்த பணத்தில், நகரின் முக்கியமான இடத்தில், சொந்தமாக மூன்று மாடி கொண்ட ஒரு காம்ளக்சையே விலைக்கு வாங்கி அதில், உடற்பயிற்சிக்கூடம், அழகு நிலையத்தை தொடங்கி அதன் மூலம் லாபத்தை பார்த்து, அம்மணி ஒரு மினி தொழில் அதிபராகவே மாறிவிட்டார்.


Click it and Unblock the Notifications