போதை மருந்துக்கு அடிமையான நடிகைகள்.. மிரட்டி பணிய வைத்த அரசியல் புள்ளி!
சென்னை: போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் பெயர் வெளிவராமல் இருக்க, அரசியல் பிரமுகரை தேடி சென்ற நடிகைகளுக்கு ஆஃபர் கொடுத்து, மிரட்டி பணிய வைத்த அரசியல் புள்ளியின் மகன் சில்மிஷ வேலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டோலிவுட்டில் பிரபலமான நடிகை, நடிகர்கள் போதை பொருளை பயன்படுத்தியதாக 2017ம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. இதில், பான் இந்திய நடிகையான ஒருவர், ஊடகம் மற்றும் சோஷியல் மீடியாக்கள் இந்த போதை பொருள் வழக்கில் என் பெயரை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்றார், அதற்கு நீதிமன்றமும் இடைக்கால தடை விதித்தது.

போதை பொருள் பயன்படுத்திய நடிகை: அதே போல, தமிழ் சினிமாவின் பிரபலமான ஒரு நடிகருடன் ஜோடி போட்டு நடித்த, ஒரு நடிகை போதை பொருள் டீலராக இருந்துள்ளார் என்ற அதிர்ச்சியான செய்தி தெலுங்கு மீடியாக்களில் வெளியானது மேலும், இதுதொடர்பான வழக்கிலும் இந்த நடிகையின் பெயர் இடம் பெற்று இருந்தது. இதையடுத்து, அந்த பான் இந்திய நடிகை ஆந்திரா அரசியல் பிரமுகரின் மகனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததால், அவருக்கு போன் போட்டு, போதை பொருள் வழக்கில் பல நடிகைகளின் பெயரும் இடம் பெற வாய்ப்பு இருப்பதால், அவர்கள் அனைவரும் பதற்றத்தில் இருக்கிறார்கள். இதனால், அவர்களின் பெயர் வராமல் பார்த்துக்கொள்ளுமாறு, அந்த அரசியல் புள்ளி மகனிடம் கேட்டுள்ளார் அந்த பாலிவுட் நடிகை.
மிரட்டிய அரசியல் பிரமுகர்: இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த அரசியல் புள்ளியின் மகன், போதை பொருள் வழக்கில் சிக்கிய நடிகைகளுக்கு எல்லாம் போன் போட்டு, இந்த வழக்கில் உன் பெயர் வராமல் இருக்க வேண்டும் என்றால், என்னிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு நடிகைகையும் மிரட்டி, அவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார் அந்த அரசியல் பிரமுகரின் மகன். இந்த செய்தி வெளியாகி டோலிவுட் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியதை அடுத்து, அது ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.


Click it and Unblock the Notifications











