கவர்ச்சியால் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொள்ளும் நடிகை
சென்னை: இளம் நடிகை திருமணம் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது அவரது வருங்கால கணவர் வீட்டில் உள்ளவர்களை கோபம் அடைய வைத்துள்ளது.
கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளவர் விரைவில் வாரிசு நடிகரை திருமணம் செய்ய உள்ளார். ஒப்புக் கொண்ட படங்களை விரைவில் நடித்து முடிக்க நினைக்கிறார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார்.

சித்து
நடிகை முன்னதாக சித்து நடிகரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்பட்ட நிலையில் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

கவர்ச்சி
நடிகை ஓவர் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தது சித்துவுக்கு பிடிக்காமல் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர். அதன் பிறகு மீண்டும் வாரிசு நடிகரிடமே திரும்பிச் சென்றார் நடிகை.

திருமணம்
திருமணத்திற்கு பிறகு நடிகை கவர்ச்சி காட்டமாட்டார் என்று வருங்கால கணவர் வீட்டில் நம்பியுள்ளனர். இந்நிலையில் நடிகையின் கவர்ச்சியான விளம்பர ஸ்டில்கள் வெளியாகி வாரிசு நடிகர் வீட்டாரை அதிர்ச்சியும், கோபமும் அடைய வைத்துள்ளது.

ஆப்பு
இந்த நடிகைக்கு வேறு யாரும் தனியாக ஆப்பு வைக்க வேண்டாம். கவர்ச்சி என்ற பெயரால் அவருக்கு அவரே ஆப்பு வைத்துக் கொள்வார் என்று சக நடிகைகள் கிசுகிசுக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications










