தப்பு பண்ணிட்டோமோ?: கவலையில் நடிகை
Recommended Video

மும்பை: தப்பு செய்துவிட்டோமோ என்று நடிகை ஒருவர் கவலையில் உள்ளாராம்.
பாலிவுட்டின் வெற்றி நாயகிகளில் ஒருவர் அந்த உயரமான நடிகை. அவருக்கும், அவரின் காதலருக்கும் அடுத்த மாதம் வெளிநாட்டில் வைத்து திருமணம் நடைபெற உள்ளது.
இதை சம்பந்தப்பட்டவர்களே சமூக வலைதளங்கள் மூலம் உறுதி செய்துள்ளனர்.

நடிகை
அழகி நடிகையின் திருமணம் அடுத்த மாதம் அரண்மனையில் நடைபெறுகிறது. அந்த திருமண விழாவை கவர் செய்ய மீடியாக்கள் தற்போதே தயாராகிவிட்டன. இது குறித்து அறிந்த உயர்ந்த நடிகைக்கு கவலையாக உள்ளதாம்.

மீடியா
உயர்ந்த நடிகையின் திருமணம் மிகவும் பாதுகாப்பான இடத்தில் நடைபெற உள்ளது. அங்கு மீடியாவுக்கு அனுமதி இல்லை. அதனால் அவரின் திருமணம் குறித்த செய்திகள் அதிக அளவில் வெளியாக வாய்ப்பு இல்லை. அதே சமயம் அழகி நடிகையின் மெஹந்தி, சங்கீத், திருமணம் என்று அனைத்து நிகழ்ச்சிகளும் இந்தியாவில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சிகள் குறித்து மீடியாவில் ஏகப்பட்ட செய்திகள் வெளியாகும்.

இந்தியா
வெளிநாட்டில் திருமணம் செய்த நடிகையை பார்த்து அவசரப்பட்டு நாமும் அங்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து தப்பு செய்துவிட்டோமோ என்று உயர்ந்த நடிகை கவலையில் உள்ளாராம். மீடியா கண்ணில் படாமல் திருமணம் செய்யவே அவர் விரும்பினார். ஆனால் அழகி நடிகையின் பக்கம் மீடியாவின் கவனம் திரும்பியதால் இந்த புதுக் கவலை அவருக்கு.

படங்கள்
அழகி நடிகைக்கு கிடைப்பது எல்லாம் தனக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார் உயர்ந்த நடிகை. காதலித்த நபரை திருமணம் செய்யப் போகும் உயர்ந்த நடிகை அதை நினைத்து மகிழ்ச்சி அடையாமல் அழகி நடிகையை பார்த்து வயித்தெரிச்சல் பட்டுக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











