உயர்ந்த நடிகை, சமத்துவை ஓரங்கட்டாமல் ஓயமாட்டேன்: இளம் நடிகை சபதம்
ஹைதராபாத்: டோலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ள பஞ்சாபி பொண்ணு உயர்ந்த நடிகை மற்றும் சமத்து நடிகையை ஓரங்கட்டாமல் விட மாட்டேன் என்று சபதம் எடுத்துள்ளாராம்.
டெல்லியில் பிறந்த பஞ்சாபி பொண்ணு தற்போது ஹைதராபாத்தில் செட்டிலாகி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கோல்ப் விளையாடும் அவரின் மவுசு டோலிவுட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது பிரின்ஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகியாக உள்ள உயர்ந்த நடிகை மற்றும் சமத்து நடிகைக்கு கடும் போட்டியாக உள்ளாராம்.
உயர்ந்த நடிகை மற்றும் சமத்துவை ஓரங்கட்டாமல் ஓயமாட்டேன் என்று பஞ்சாபி பொண்ணு சவால் விட்டுள்ளாராம். அம்மணி படம் ஒன்றுக்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்குகிறார்.
அண்மையில் கூட பெரிய வீட்டு விசேஷத்தில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கினார் நடிகை.


Click it and Unblock the Notifications











