Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அபிராமி.. அபிராமி.. அழகுத் தமிழ் பேசி அருமையாக நடித்து வந்த அபிராமி இப்போது எந்த மொழிப் படத்திலும் நடிக்கவில்லை. அவர் எங்கேபோனார் என்றும் தெரியவில்லை. ரகசியமாக கல்யாணம் பண்ணிக் கொண்டு அவர் செட்டில் ஆகிவிட்டதாக ஒரு செய்தி வலம்வருகிறது.கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அச்சு அசல் தமிழ்ப் பெண்ணான அபிராமி, தமிழில் ஒரு ரவுண்டு வந்தார். கலராக இல்லாவிட்டாலும் களையாக இருந்த அபிராமிக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்க அவ்வளவாக வாய்ப்புகள் வரவில்லை.பிரபு, அர்ஜூன் போன்ற இரண்டாம், மூன்றாம் மட்ட ஹீரோக்களுடன் நடிக்கவே வாய்ப்பு வந்தது.கவர்ச்சி அலையில் கோலிவுட் சிக்கி சீரழிந்து வருவதால் அபிராமி போன்ற கிளாமர் வாகு இல்லாத நடிகைகளுக்கு அதிகவாய்ப்புகள் வராமல் போனதில் ஆச்சரியம் இல்லைதான்.இருந்தாலும் அபிராமிக்கென்று சில படங்கள் கிடைத்து நடித்தும் வந்தார். அப்படி இப்படி என பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்து முடித்தார்.தமிழில் கிடைத்த அறிமுகத்தால் மலையாளத்திலும், தெலுங்கிலும் நடித்து வந்த அபிராமி இடையில் காதலில் சிக்கினார். காக்ககாக்க பட இயக்குனர் கெளதம் மேனனுக்கும், அபிராமிக்கும் காதல் உண்டானது.காக்க காக்க தெலுங்குப் பதிப்பில் ஜோதிகா ரோலில் முதலில் அபிராமிதான் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதில் அபிராமிநடிக்கவில்லை. கெளதமுடன் அபிக்கு மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் விலகிவிட்டது தான் அதற்குக் காரணம் என்றார்கள்.இந் நிலையில் தான் கமலுடன் விருமாண்டியில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்தப் படம் அபிராமிக்கு மிக நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.நல்ல நடிகையாகவும் அடையாளம் காணப்பட்ட அவர் தனக்கு வந்த பாராட்டுகளால் மகிழ்ந்து போனார். இதனால் தனக்குவாய்ப்புக்கள் குவியப் போவதாக நினைத்து காத்திருந்தார். ஆனால், காத்திருந்து காத்திருந்து வெறும் காத்து தான் வந்தது.வாய்ப்பு ஏதும் வரவில்லை.நொந்து போன அவர் வாய்ப்புக்காக காத்துக் கிடந்து, வெறுத்துப் போய் சொந்த ஊரான திருவனந்தபுரத்துக்கே திரும்பினார். இப்போது அபிராமியை எங்குமே காண முடியவில்லை. தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளத்திலும் அவர் எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. படிப்பதற்காக அவர் வெளிநாட்டுக்குப் போய் விட்டதாக ஒரு தகவல் சொல்கிறது.கேரளாவில் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டதாகக் கூட ஒரு புரளி கிளம்பியிருக்கிறது.எது உண்மையோ.. அபிராமியே வாய் திறந்தால் தான் உண்டு..
அழகுத் தமிழ் பேசி அருமையாக நடித்து வந்த அபிராமி இப்போது எந்த மொழிப் படத்திலும் நடிக்கவில்லை. அவர் எங்கேபோனார் என்றும் தெரியவில்லை. ரகசியமாக கல்யாணம் பண்ணிக் கொண்டு அவர் செட்டில் ஆகிவிட்டதாக ஒரு செய்தி வலம்வருகிறது.
கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அச்சு அசல் தமிழ்ப் பெண்ணான அபிராமி, தமிழில் ஒரு ரவுண்டு வந்தார்.
கலராக இல்லாவிட்டாலும் களையாக இருந்த அபிராமிக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்க அவ்வளவாக வாய்ப்புகள் வரவில்லை.பிரபு, அர்ஜூன் போன்ற இரண்டாம், மூன்றாம் மட்ட ஹீரோக்களுடன் நடிக்கவே வாய்ப்பு வந்தது.
கவர்ச்சி அலையில் கோலிவுட் சிக்கி சீரழிந்து வருவதால் அபிராமி போன்ற கிளாமர் வாகு இல்லாத நடிகைகளுக்கு அதிகவாய்ப்புகள் வராமல் போனதில் ஆச்சரியம் இல்லைதான்.
இருந்தாலும் அபிராமிக்கென்று சில படங்கள் கிடைத்து நடித்தும் வந்தார். அப்படி இப்படி என பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்து முடித்தார்.
தமிழில் கிடைத்த அறிமுகத்தால் மலையாளத்திலும், தெலுங்கிலும் நடித்து வந்த அபிராமி இடையில் காதலில் சிக்கினார். காக்ககாக்க பட இயக்குனர் கெளதம் மேனனுக்கும், அபிராமிக்கும் காதல் உண்டானது.
காக்க காக்க தெலுங்குப் பதிப்பில் ஜோதிகா ரோலில் முதலில் அபிராமிதான் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதில் அபிராமிநடிக்கவில்லை. கெளதமுடன் அபிக்கு மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் விலகிவிட்டது தான் அதற்குக் காரணம் என்றார்கள்.
இந் நிலையில் தான் கமலுடன் விருமாண்டியில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்தப் படம் அபிராமிக்கு மிக நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.
நல்ல நடிகையாகவும் அடையாளம் காணப்பட்ட அவர் தனக்கு வந்த பாராட்டுகளால் மகிழ்ந்து போனார். இதனால் தனக்குவாய்ப்புக்கள் குவியப் போவதாக நினைத்து காத்திருந்தார். ஆனால், காத்திருந்து காத்திருந்து வெறும் காத்து தான் வந்தது.வாய்ப்பு ஏதும் வரவில்லை.
நொந்து போன அவர் வாய்ப்புக்காக காத்துக் கிடந்து, வெறுத்துப் போய் சொந்த ஊரான திருவனந்தபுரத்துக்கே திரும்பினார்.
இப்போது அபிராமியை எங்குமே காண முடியவில்லை. தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளத்திலும் அவர் எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. படிப்பதற்காக அவர் வெளிநாட்டுக்குப் போய் விட்டதாக ஒரு தகவல் சொல்கிறது.
கேரளாவில் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டதாகக் கூட ஒரு புரளி கிளம்பியிருக்கிறது.
எது உண்மையோ.. அபிராமியே வாய் திறந்தால் தான் உண்டு..
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே