சம்பளத்தை உயர்த்தும் பிசி நடிகர்: காரணம் தான்...
சென்னை: புதுமுக இயக்குனர்களிடம் இருந்து தப்பிக்க பெயரில் வெற்றியை வைத்திருக்கும் பிசி நடிகர் புது திட்டம் போட்டுள்ளாராம்.
கோலிவுட்டின் பிசியான நடிகர் அவர் தான். ஆண்டு முழுவதும் அவர் படங்கள் ரிலீஸாகிக் கொண்டே இருக்கும். அவரும் தொடர்ந்து புதுப்படங்களில் நடித்துக் கொண்டே இருப்பார்.

அவரிடம் கதை சொல்ல புதுமுக இயக்குனர்கள் அதிக அளவில் வருகிறார்களாம். சார், இந்த மாதிரி ஒரு கதையை தமிழ் சினிமா இதுவரை பார்க்கவே இல்லை என்று பில்ட்அப் கொடுக்கிறார்களாம்.
தற்போது பிரபல இயக்குனர்களின் படங்களில் நடித்து வரும் அவர் புதுமுக இயக்குனர்களை தவிர்க்க விரும்புகிறாராம். கதை கேட்க முடியாது என்று முகத்தில் அடித்தது போன்று சொல்ல அவருக்கு மனசு இல்லையாம்.
அந்த காரணத்தால் தனது சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளாராம். அதிக சம்பளம் கேட்டால் புதுமுக இயக்குனர்கள் நடையை கட்டிவிடுவார்கள் என்பது நடிகரின் கணக்கு.


Click it and Unblock the Notifications











