கணவரை கார்னர் செய்து காரியத்தை சாதித்த மனைவி.. கம்முன்னு இருக்க அதுதான் காரணமாம்?
சென்னை: பிரபல நடிகரின் மனைவி பல ஆண்டுகளாக கணவரின் கள்ளக் காதல் கதைகளை எல்லாம் சகித்துக் கொண்டு தான் வாழ்ந்து வந்த நிலையில், நடிகை ஒருவர் பண்ண ஓவர் அலம்பல் தாங்க முடியாமல் நடிகையை அடக்கி வைக்க கணவரிடம் சொல்ல, அவர் அதற்கு மேல் ஆடுவேன் என வெறுப்பேற்றவே கணவர் தனக்காக இனிமேல் இருக்க மாட்டார் என்கிற விரக்தியில் மனைவி அவரை விட்டு பிரிய முடிவு எடுத்துவிட்டாராம்.
மனைவி கோபித்துக் கொண்ட போன நிலையில், அவரை சமாதானம் செய்ய கணவர் பறந்து வருவார் என்று பார்த்தால் இதுதான் தக்க சமயம் என நடிகையுடன் ரொம்பவே நெருக்கம் காட்டத் தொடங்கி விட்டார் என்கின்றனர்.

இந்நிலையில், நடிகரிடம் இருந்து பெரிய தொகையை பெற்றால் மட்டுமே தன்னையும் தனது குழந்தைகளையும் காப்பாற்ற முடியும் என்பதால் தான் சரியான நேரம் பார்த்து நடிகரை கார்னர் செய்துள்ளார் மனைவி என திடுக்கிட வைக்கின்றனர்.
பெரிய தொகை டீல்: நடிகர் யாருடன் சென்றால் நமக்கென்ன நமக்கு பெரிய தொகை தான் வேண்டும். நடிகரை அசிங்கப்படுத்தினால் தம்புடி தேறாது என்பதை நன்றாக புரிந்து வைத்துக் கொண்ட மனைவி கணவரை சரியான நேரத்தில் கார்னர் செய்து பெரிய தொகையை தன் வசப்படுத்திக் கொண்டார் என்று கிசுகிசுக்கள் கசிந்துள்ளன.
கசியவிட்டதே அவர் தானா?: நடிகருக்கு எதிரான ஆதாரங்களை சரியான நேரத்தில் எந்தளவுக்கு கசிய விட வேண்டுமோ அந்த அளவுக்கு கசியவிட்டு தனக்குத் தேவையான விஷயத்தை செய்துக் கொண்டு சைலன்ட்டாக செட்டில் ஆகிவிட்டார் நடிகரின் மனைவி என பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.
நடிகைக்கு வருத்தம்: ஒட்டுமொத்தமாக நடிகரின் சொத்துக்களை சொந்தம் கொண்டாடலாம் என நினைத்துக் கொண்டிருந்த நடிகைக்கு சரியான நேரத்தில் நடிகரின் மனைவி வைத்த ஆப்பு காரணமாக பாதி சொத்து காணாமல் போய்விட்டதே என்று நடிகைக்கு ரொம்பவே வருத்தமாம். ஆனால், போனது போகட்டும் ஏகப்பட்ட சொத்துக்கு நாம தான இனிமேல் சொந்தக்காரி என்பதால் நடிகை சற்றே தனது மனதை தேற்றி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











