Don't Miss!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
யோபுவும், குத்தாட்ட நடிகைகளும்
வீடு கட்டும் காண்டிராக்ட் தருவதாக கூறி நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களை ஏமாற்றியதாக கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் யோபு சரவணனுடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்டதாக இரண்டு பிரபலநடிகைகள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
வேலூரைச் சேர்ந்த யோபு சரவணன், வீடு கட்டித் தரும் திட்டம் என்ற பெயரில் பல நூறு காண்டிராக்டர்களிடம்பல கோடி பணத்தை சுருட்டி, தலைமறைவாகி தற்போது போலீஸ் வசம் சிக்கியுள்ளார்.அவருக்கும் பல நடிகைகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதில் இரண்டு பிரபல நடிகைகளும் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பான வீடியோ ஆதாரம் போலீஸாரிடம் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இந்த இரு நடிகைகளும் தமிழ்சினிமாவில் பிரபலமானவர்கள்.
அவர்களில் ஒருவர் மன்மத ராசா நடிகை. இன்னொருவர் சின்ன வீடா, பெரிய வீடா என கேட்டவர்.
யோபு சரவணன் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் இந்த இருவரும் போட்டுள்ள குத்தாட்டம், போலீஸாரையேவிதிர்க்க வைத்து விட்டதாம். சினிமாவில் கூட இவர்கள் இப்படி ஆட்டம் போட்டதில்லை. அந்த அளவுக்குஅசத்தியிருக்கிறார்களாம் ஆட்டத்தில்.
இவர்களுடன் சேர்ந்து யோபு போட்ட ஆட்டம்தான் போலீஸாரை வாய் வலிக்க சிரிக்க வைத்துள்ளதாம். பிஷப்என்று சொல்லிக் கொண்ட யோபு, இரு நடிகைகளுடனும் சேர்ந்து போட்டுள்ள ஆட்டத்தை வீடியோவில் பார்த்துசிரிப்பு வராமல், என்ன வருமாம்...
இந்த இரு நடிகைகளுக்கும் யோபு பணத்தை அள்ளி வழங்கியிருக்கலாம் என போலஸீார் சந்தேகிக்கிறார்கள்.எனவே இவர்களிடம் விசாரணை நடத்தினால் மேட்டர் தேறும் என போலீஸார் எண்ணுகிறார்கள்.
இந்த நடிகைகளோடு யோபுவின் 3 மனைவியரில் ஒருவரும் கூட சேர்ந்து ஆடி கலக்கியுள்ளாராம். அத்தோடுயோபுவுக்கு நெருக்கமானவரான அந்த பிரபல சிரிப்பு நடிகரும் கூட ஆட்டத்தில் பங்கேற்று குதியாட்டம்போட்டுள்ளாராம்.
விரைவில் இந்த நடிகைகள் மற்றும் நடிகரை பிடித்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதை அறிந்துகொண்ட அந்த சிரிப்பு நடிகர் பிரபல அரசியல் தலைவர் ஒருவரை அணுகி தஞ்சம் அடைந்துள்ளாராம்.