Don't Miss!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் 'தொடையைச் சுட்டுக் கொள்ள' தயாராகும் நடிகை!
நடிகரோ நடிகையோ சொந்தப் படம் தயாரிக்க முடிவெடுத்து களத்தில் இறங்கி கையைச் சுட்டுக் கொள்வது வாடிக்கையாக நாம் பார்ப்பதுதான்.
அந்த வகையில் நடிப்பில் முன்னணியில் இருந்தபோதே தயாரிப்புக் களத்தில் இறங்கிய ஒரு நடிகை, கையை மட்டுமல்ல, கடன்காரரிடம் சிக்கி தொடையையும் சுட்டுக் கொள்ளும் அளவுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்தார்.
வீடுவாசலைக் கூட இழக்க வேண்டிய நிலை. தொடர்ச்சியாக செக் மோசடி வழக்கு சிந்துபாத் கதை மாதிரி நீண்டுகொண்டே போனது. இப்போதும் கூட ஒன்றிரண்டு வழக்குகள் உயிரோடு இருப்பதாகக் கூறுகிறார்கள்.
சினிமாவிலிருந்து காணாமலே போய்விட்ட இந்த நடிகை, திடீரென ஒரு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து குழந்தை கூட பெற்றுக் கொண்டார்.
இப்போது மீண்டும் சினிமா படம் எடுக்க வருகிறார். முதலீடு... 'அன்பூஸ், போத்ராஸு'க்கெல்லாம் அவசியமில்லையாம். வெளிநாட்டில் வெயிட்டாக சம்பாதித்து வைத்திருக்கும் கணவரின் பணம்தான் தயாரிப்பு முதலீடாம்.
'நல்ல கதை இருந்தா... ரூம் போட்டு வைய்ங்க... நானே சென்னைக்கு வந்து கேட்டு, அப்பவே முடிவு செய்யறேன்', என்கிறாராம்!