சித்தியோடு கத்தி கத்தி சண்டை போட்டு குண்டான நடிகை
சென்னை: சமீபத்தில் மீடியாக்களுக்கு தொடர்ந்து நல்ல ஹாட் நியூஸ்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தவர் அங்காடி நடிகை.
ஊர் ஊராக ஓடி ஒளிந்ததில் கண்டதையும் சாப்பிட்டு கொழுப்பு ஓவராகப் போட்டு விட்டதாம். ஏற்கனவே இயக்குநருடனான சண்டையால் இவரை தங்களுடய படத்தில் நடிக்க வைக்கவே இயக்குநர்களும், நடிகர்களும் அஞ்சுகின்றனர்.
இருந்தாலும் அடி மனதில் அங்காடி மீது கொஞ்சமாவது அன்பு வைத்துள்ள சில நல்ல உள்ளங்கள் அவரை படத்திற்காக அணுகச் சென்றாலும் அம்மணியின் தற்போதைய உடலைக் கண்டு அதிர்ந்து நிற்கிறார்களாம்.
தனது பெருத்த உடலைக் கண்டு அம்மணிக்கே அழுகை அழுகையாக வருகிறதாம். இந்த பெருத்த உடலால் எந்த உடையும் அம்மணிக்கு பொருந்த மாட்டேன்கிறதாம். அதனால், படப்பிடிப்பில் ஓய்வில் இருக்கும் நேரங்களில் யாராவது சக நடிகர், நடிகைகளை அழைத்துக் கொண்டு ஷட்டில் விளையாடக் கிளம்பி விடுகிறாராம்.
ஆனால், உடம்பு தான் இன்னும் குறைந்த பாடில்லையாம்.


Click it and Unblock the Notifications











