வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கொடுத்த பிரபல நடிகை
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகை ஒருவர் தன் படத்தின் ஹீரோவுக்கு ஷூட்டிங்ஸ்பாட்டில் சாப்பாடு ஊட்டிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான அவர் திருமணமான வேகத்தில் கணவரை பிரிந்துவிட்டார். அவர் கணவரை பிரிந்து வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த பிறகு பிரபல மலையாள நடிகர் ஒருவர் தனது காதல் மனைவியை பிரிந்தார்.

நடிகர் தனது மனைவியை பிரிய அந்த நடிகை தான் காரணம் என்று மல்லுவுட்டில் இன்று வரை பேசுகிறார்கள். மேலும் நடிகரும், கணவரை பிரிந்து ஊர் திரும்பிய நடிகையும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூட பல நாட்களாக பேச்சாகக் கிடக்கிறது.
இந்நிலையில் அந்த நடிகரும், நடிகையும் சேர்ந்து பிரபல இயக்குனரின் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பில் அவர்கள் நெருக்கம் காட்டி வருவதை படக்குழு கவனிக்காமல் இல்லை. ஆனால் அவர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.
படப்பிடிப்பு தளத்தில் அத்தனை பேர் இருக்க நடிகை அந்த நடிகருக்கு சாப்பாட்டை ஊட்டிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











