ஓவர் குடி.. ஆண் நண்பர்கள்.. நள்ளிரவு பார்ட்டி.. நடிகையை விவாகரத்து செய்தது பற்றி மனம் திறந்த கணவர்!
நடிகையை விவாகரத்து செய்ததற்கான காரணம் குறித்து முன்னாள் கணவர் பேசிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: காதல் மனைவியான நடிகையை விவாகரத்து செய்தது ஏன் என்பது பற்றி அவரது முன்னாள் கணவர் கூறி வரும் காரணங்கள் தான் இப்போது டாக் ஆப் தி டவுனே.
சின்னத்திரை மட்டுமின்றி, வெள்ளித்திரையிலும் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் இந்த நடிகை. மிக மிக நீண்ட காலமாக சின்னத்திரை தொகுப்பாளினியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர், கலகலப்பானவர் எனப் பேர் எடுத்தவர் இவர். ஆனால் இவரது திருமண வாழ்க்கை தொடங்கிய வேகத்திலேயே முடிந்து விட்டது.

காரணம்
ஏன் கணவரைப் பிரிந்தார் என்பது இதுவரை மக்களுக்கு தெரியாமலேயே இருந்து வந்தது. ஆனால் தற்போது கணவர் விவாகரத்திற்கான காரணம் குறித்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கி விட்டாராம். இது சம்பந்தப்பட்ட தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஆண் நண்பர்கள்
அதாவது சம்பந்தப்பட்ட நடிகை திருமணத்திற்குப் பிறகும் தினமும் நள்ளிரவு பார்ட்டிகளுக்கு சென்று குடித்து வந்ததாகவும், ஆண் நண்பர்கள் அதிகம் என்பதாலும் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆனால், நடிகை மாற மறுத்து விட்டாராம்.

மௌனம் கலைந்தது
அதனால் தான் இருவரும் சட்டப்படி பிரிந்து விடலாம் என விவாகரத்து பெற்று விட்டார்களாம். இவ்வளவு நாள் அமைதியாக இருந்த கணவர் இப்போது ஏன் இதைப் பற்றி பேசத் தொடங்கினார் என்பது தெரியவில்லை. ஆனால் கணவரின் மௌனம் கலைந்ததால் நடிகையின் இமேஜ் கெடும் சூழல் தான் நிலவுகிறது.

நடிகை கோபம்
இந்தத் தகவல்களைக் கேட்டு இவரா இப்படியெல்லாம் செய்தார் என மக்கள் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இவ்வளவு நாள் இருந்த நல்ல பெயரை, முன்னாள் கணவரின் பேச்சு கெடுத்து விட்டதே என நடிகையும் கோபத்தில் இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











