அது அப்போ, இது இப்போ: சம்பளத்தை உயர்த்திய சிரிப்பழகி நடிகை
சென்னை: சிரிப்பழகி நடிகை தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அந்த சிரிப்பழகி. அவர் நடிப்பில் அண்மையில் வெளியான படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக அவரின் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர்.

பிற நடிகைகள் நடிக்கத் தயங்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெயர் வாங்கிவிட்டார். இந்நிலையில் அவர் தனது சம்பளத்தை ரூ. 2 கோடியில் இருந்து ரூ. 2.5 கோடியாக உயர்த்தியிருக்கிறாராம்.
அவருக்கு மார்க்கெட் நன்றாக இருப்பதால் அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் முகம் சுளிக்கவில்லை. அவர் நடித்துள்ள தெலுங்கு படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது.
அந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அவர் நடித்தால் எந்த படமும் ஹிட்டாகும், அவர் ராசியானவர் என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











