Don't Miss!
- News ‛‛29 இடங்கள்''.. திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் இதுதான்! தந்தி டிவி கருத்து கணிப்பு
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
“என் வாழ்க்கையை சீரழித்தது இவர்தான்”.. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் குண்டு போட தயாராகும் பாடகி நடிகை!
தன்னை ஏமாற்றியது யார் என விரைவில் அறிவிக்க இருக்கிறாராம் பிரபல நடிகை.
Recommended Video
சென்னை: தன்னை ஏமாற்றி மன அழுத்தத்திற்கு ஆளாக்கியது யார் என வெளிப்படையாகக் கூற இருப்பதாக பிரபல பாடகி நடிகை அறிவித்திருப்பது குறிப்பிட்ட கட்சியினரை கிலியடையச் செய்திருக்கிறதாம்.
நடிப்பில் மட்டுமின்றி இனிமையான குரல் வளத்தாலும் மக்களை மயக்கியவர் இந்த நடிகை. கை நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தாலும், அதில் தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகத் தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர் அவர். அதனாலேயே விரல் விட்டு எண்ணும்படியான படங்களில் நடித்திருக்கும் போது, மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்.
சில காலம் வெள்ளித்திரையில் இருந்து தள்ளி இருந்த இந்த நடிகை, சமீபத்தில் தன் உள்ளக் குமுறல்களை வார்த்தைகளாகக் கொட்டி படைப்பொன்றை வெளியிட்டார்.
தசரா விடுமுறையை கொண்டாட இத்தாலி பறந்த மகேஷ் பாபு ஃபேமிலி
நடிகை தந்த அதிர்ச்சி
அது தொடர்பான விழாவில், தான் வாழ்க்கையில் ஏமாற்றப்பட்டது தொடர்பாகக் கூறி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். அதோடு தீவிர மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் அப்போது அவர் தெரிவித்திருந்தார். இது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது.
மௌனம்
நடிகையின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் இணையத்தில் உலா வந்தது. ஆனால், நடிகை வெளிப்படையாக அந்த பெயரைக் குறிப்பிட மறுத்து விட்டார். மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்தார்.
யார் அந்த கருப்பு ஆடு?
இந்நிலையில் தனது படைப்பை சமூகவலைதளப் பக்கத்தில் மீண்டும் வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம் நடிகை. அப்போது அந்த நபர் யார் என்பது பற்றி அதில் கூறுவாராம். இதைக் கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், சம்மந்தப்பட்ட நபர்கள் கிலி அடைந்துள்ளார்களாம்.
உள்ளாட்சித் தேர்தல் சமயம்
காரணம் சம்பந்தப்பட்ட நபர், அரசியல் வட்டாரத்தில் மிகவும் பெரிய இடத்தை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில் இப்படி நடிகையின் அதிரடி அறிவிப்பு அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளதாம். நிச்சயம் நடிகையின் பேச்சு தேர்தல் சமயத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் என்கிறார்கள். பார்ப்போம் என்ன நடக்கிறது என.