Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
எனக்கேவா.. அக்ரிமென்ட்ல அதுக்கு ஓகே சொல்லி கையெழுத்து போட்டாதான் கால்ஷீட்டே.. நம்பர் நடிகை அதிரடி!
சென்னை: அதுக்கு ஓகே சொன்னால் தான் படத்திலேயே நடிப்பேன் என நம்பர் நடிகை அதிரடி முடிவு எடுத்துள்ளாராம்.
கோடி கோடியாக சம்பளம் வாங்கும் சில முன்னணி நடிகைகள் படத்தில் நடித்து கொடுத்துவிட்டால் கடமை முடிந்தது என கம்பியை நீட்டி விடுகின்றனர்.
படம் தொடர்பான எந்த புரமோஷன் நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை. இந்த விவகாரம் நீண்ட நாட்களாகவே கோலிவுட்டில் புகைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
காப்பீடுல்லாம் பொய்யாம்.. ஷுட்டிங் முடிஞ்சு பேமென்ட்டே 2 லட்சம் பேலன்ஸாம்.. புலம்பும் தொழிலாளர்கள்!
சம்பளத்தை பிடிப்போம்
அண்மையில் முன்னணி நடிகை தான் நடித்த விளையாட்டின் பெயர் கொண்ட படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதனால் கடுப்பான தயாரிப்பு புரமோஷன் நிகழ்ச்சியிலேயே அவரை கடுமையாக சாடியது. புரமோஷனுக்கு வராவிட்டால் சம்பளத்தை பிடிப்போம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
செம டென்ஷன்
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கோடி கோடியாக சம்பளத்தை வாங்கி குவிக்கும் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தயாரிப்பு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் செம டென்ஷன் ஆகிவிட்டாராம் முன்னணி நம்பர் நடிகை.
அதுக்கு ஓகே சொன்னாதான்
என்னுடைய அந்த கண்டிஷனுக்கு ஓகே சொல்லி அக்ரிமென்ட்டில் கையெழுத்து போட்டால்தான் உங்களின் படத்திலேயே நான் நடிப்பேன் என ஒப்பந்தத்தின் போதே தயாரிப்பு தரப்பிடம் தெளிவாக சொல்லிவிட முடிவு செய்திருக்கிறாராம் நடிகை. நீங்கள் என்ன முடிவு செய்தாலும் நான் நினைப்பதை தான் செய்வேன் என்றிருக்கிறாராம் நம்பர் நடிகை.
வாய்ப்புகள் இழப்பு
அப்படி புரமோஷனுக்கு வந்து தான் தீர வேண்டும் என்றால் அப்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பேசி வருகிறாராம் உச்சத்தில் இருக்கும் நம்பர் நடிகை. ஏற்கனவே தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில்தான் நடிப்பேன் என பிடிவாதமாக இருந்து வருகிறார் நடிகை. இதனால் பல பட வாய்ப்புகளை இழந்துவிட்டார்.
நடிகையின் நட்பு வட்டம்
இதேபோல் உச்ச நடிகரின் படத்திலும் அவருடன் டூயட் பாட வேண்டும் என்று இயக்குநருக்கு குடைச்சல் கொடுத்து வருகிறாராம். தற்போது இந்த விஷயத்திலும் தனது பிடிவாதத்தை காட்டி இருக்கும் வாய்ப்பையும் இழக்கப்போகிறார் என்கின்றனர் நடிகையின் நட்பு வட்டாரத்தினர். இருந்தாலும் இவ்வளவு அடம் ஆகாதும்மா!