பட வாய்ப்பை பெற இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை அதிர வைத்த நடிகை
சென்னை: இளம் நடிகை ஒருவர் பட வாய்ப்பு இல்லாததால் படுகவர்ச்சியாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
அழகும், திறமையும் உள்ளவர் அந்த நடிகை. அலட்டிக் கொள்ளாமல் அம்சமாக நடிப்பார். ஆனால் இன்னும் அவரால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகியும் தற்போதும் கோலிவுட்டில் போராடிக் கொண்டிருக்கிறார்.

நன்றாக தமிழ் பேசத் தெரிந்த அவருக்கும், அவரை விட வயதில் சின்னவரான நடிகர் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் நடிகர் கெரியரில் கவனம் செலுத்த முடிவு செய்துவிட்டார். இதனால் தற்போதைக்கு காதல் கை கூடி திருமணம் நடப்பதாக இல்லை.
நடிகைக்கு பட வாய்ப்புகளும் வரவில்லை. காதலும் சரியில்லை, கெரியரும் சரியில்லை என்று நடிகை நொந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பட வாய்ப்பை பெற படுகவர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களை பார்த்து ஒரு நிமிஷம் அதிர்ச்சி அடையாதவர்களே இல்லை. இதற்கிடையே நடிகைக்கு ராசி இல்லை என்று வேறு யாரோ கிளப்பிவிட்டுள்ளனர். அதனாலும் அவருக்கு பட வாய்ப்பு வருவது சிரமமாக உள்ளது.
நடிகையை கவுரவத் தோற்றத்தில் நடிக்க வைக்கவே பலர் விரும்புகிறார்கள். இல்லை என்றால் 2, 3 ஹீரோயின் உள்ள கதையில் நடிக்கும் வாய்ப்பு வருகிறது. இந்த இரண்டுமே நடிகைக்கு பிடிக்கவில்லை.
எனக்கு வயதும், அழகும், திறமையும் உள்ளது. அதனால் காத்திருந்து சிங்கிள் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று தீர்மானமாக உள்ளார். நடிகை தான் ஒப்புக் கொள்ளும் படத்தில் கதாபாத்திரமாகவே மாறி நடிக்கிறார். கவர்ச்சி காட்டவும் தயங்குவது இல்லை. அப்படி இருந்தும் அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் வருவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











