நடிகையின் பிடியில் 'ஒரு இயக்குநர் இரண்டு ஹீரோக்கள்'!
தான் ஒரு பச்சைத் தமிழச்சி என தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஹீரோயின் அவர். முகத்திலும் தோள்களிலும் முதிர்ச்சி எட்டிப் பார்த்தாலும் கோலிவுட்டைப் பொறுத்தவரை அவர் ப்ரியமான இளம் 'ஹீரோயினி'தான்.
ஆரம்பத்தில் இவரது படங்கள் ஒன்று கூட எடுபடவில்லை. இந்தப் பொண்ணு நடிச்சா அவ்ளோதாம்பா என்று திரும்பிப் பார்க்காமல் போய்விட்டார்கள் தயாரிப்பாளர்கள். நடிகர்களின் ஆதரவும் இல்லாத நிலையில், முன்னாள் நடிகை ஒருவரின் மறுபிரவேசப் படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது.
எப்படியோ எதிர்நீச்சல் போட்டு இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகிவிட்டார்.
இப்போது கிடைத்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். இல்லாவிட்டால் பழையபடி ராசியில்லாத பட்டம் தேடி வந்துவிடுமோ என்ற பயம்.
பார்த்தார்.. உடனே நினைவுக்கு வந்தது கலைக்குடும்ப நடிகரின் டெக்னிக்தான். பார்ட்டி, டிஸ்கஷன் என்ற பெயரில் உடன் நடித்த ஹீரோக்களை வளைக்க ஆரம்பித்துவிட்டாராம். அவரது அன்புப் பிடியில் இப்போது சிக்கியிருப்பவர்கள் மறைந்த காலேஜ் ஹீரோவின் மகனும், காதல் ஹீரோவின் மகனும்தான். இந்த இருவரும் இப்போது பெரும்பாலான நேரத்தைக் கழிப்பதே ஹீரோயினுடன்தானாம்.
உடன் நடித்த ஹீரோக்கள் விழுவதில் ஆச்சர்யமில்லைதான். ஆனால் அவரை வைத்து இயக்கிய டைரக்டரையும் கப்பென்று பிடித்துக் கொண்டார் நடிகை.
ஆரம்பத்தில் அந்தப் படத்தில் இவரல்ல நாயகி. இத்தனைக்கும் அவரைப் பார்த்து ரொம்ப மெச்சூர்டா இருக்காளே.. என்று சொன்ன டைரக்டருக்கு என்ன நடந்ததோ... ப்ரிய நாயகியே இருக்கட்டும் என ஆனந்தமாக ஒப்பந்தம் செய்தார்.
இதன் விளைவு, திட்டமிட்ட பட்ஜெட்டை விட ஒன்றரை கோடி அதிகமாக விழுங்கியிருக்கிறது அந்தப் படம். நாயகியின் அன்பில் அளவுக்கு மீறி நனைந்துவிட்டதால், சோலோ பாடல் வைத்திருக்கிறார் டைரக்டர். நாயகி யாரை நோக்கி கை நீட்டினாரோ, அவர்தான் மேக்கப் மேன்.. யாரை சிபாரிசு செய்தாரோ அவரே நடன இயக்குநர்...
இதற்கெல்லாம் உறுதுணையாக இருப்பவர் ஒரு ஆர்டிஸ்ட் மேனேஜர்தான் என்று கூறப்படுகிறது.
இந்த ரேஞ்சில் போனால் நடிகையின் கொடி பறக்கும்.. ஆனால் சம்பந்தப்பட்ட இயக்குநர் மற்றும் நடிகர்களின் கதி?
கவலையோடு பார்க்கிறது சம்பந்தப்பட்டவர்களின் நட்பு வட்டம்!


Click it and Unblock the Notifications











