“எல்லாத்துக்கும் ஓகே”.. இறங்கி வந்த பிரபல நடிகை.. ஆனா காலம் கடந்து எடுத்த முடிவால் நோ யூஸ்!
பிரபல நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக எல்லா அட்ஜெஸ்ட்மெண்டுக்கும் தயார் என்று கூறியிருக்கிறாராம்.
Recommended Video

சென்னை: பிரபல நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக எல்லா அட்ஜெஸ்ட்மெண்டுக்கும் தயார் என்று கூறியிருக்கிறாராம். ஆனாலும் வயதாகி விட்டதால் படவாய்ப்புகள் இல்லை.
முதல் படத்தில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகருடன் அறிமுகமானவர் இந்த நடிகை. நாயகன், நாயகி என இரண்டு பேருக்குமே இந்தப் படம் நல்ல பேரை வாங்கிக் கொடுத்தது. இதனால் அடுத்தடுத்து படவாய்ப்புகள் இருவருக்குமே கிடைத்தது.
ஆனால், கிடைத்த வாய்ப்புகளை நாயகன் பயன்படுத்திக் கொண்ட அளவிற்கு இவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

திருமணம்:
சில படங்களிலேயே நடித்தாலும் திறமையான நடிகை எனப் பெயரெடுத்தவர், திடீரென தன்னை இயக்கிய இயக்குநருடனேயே காதலில் விழுந்தார். பின்னர் காதலரையே கரம் பிடித்தார். இதனால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார்.

தோற்றத்தில் மாற்றம்:
ஆனால், இந்தத் திருமணப் பந்தம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. இருவரும் மனமொத்து பிரிந்தனர். இதற்கிடையே குடிக்கு அடிமையானதால் நடிகையின் முகத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டது. அதனால் வயது குறைவாகவே இருந்தாலும், பழையபடி நாயகி வேடம் கிடைக்கவில்லை.

அதிரடி முடிவு:
சரி, நாயகி வேடம் இல்லாவிட்டாலும் கிடைத்த வேடத்தில் நடிக்கலாம் என நடிகை நினைக்கிறார். இதற்காக கவர்ச்சியில் நடிக்கவும் அவர் முடிவெடுத்துவிட்டார். இதனை ஓப்பன் ஸ்டேட்மெண்டாக தனக்குத் தெரிந்தவர்களிடமும் கூறி வருகிறார்.

நாயகிகளே ஓகே:
ஆனால், வயதாகி விட்டதால் இனி இவர் கவர்ச்சியாக நடித்தாலும் யார் பார்க்கப் போகிறார்கள் எனச் சிரிக்கிறார்களாம் சம்பந்தப்பட்டவர்கள். அதோடு தற்போது இளம் நாயகிகளே கவர்ச்சியில் பின்னி பெடலெடுப்பதால், இவரது கவர்ச்சி பிரவேசம் எல்லாம் இப்போது செல்லுபடியாகாது என்பது அவர்களது வாதம்.

அறிவுரை:
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழிக்கு மாறாக, சீக்கிரமாகவே திருமணம் செய்து கொண்டு இப்போது பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார் இந்த நடிகை. பேசாமல் கிடைத்த வேடத்தில் நடிக்கலாம் அல்லது பழைய நல்ல பெயரை அப்படியே தக்கவைத்துக் கொண்டு சினிமாவில் இருந்து விலகி விடலாம் என்பது தான் அவரது நலம் விரும்பிகளின் விருப்பம்.


Click it and Unblock the Notifications











