வளைத்துப் போடுவதில் வாரிசு நடிகை திறமையே அலாதி!
பெரிய இடத்து விவகாரம்தான். ஆந்திரா பக்கம் அவரை வளைத்தார், இவருடன் குடித்தனம் நடத்துகிறார் என்று பெரிதாக கிசுகிசுக்கப்பட்ட வாரிசு நடிகை அவர்.
தமிழில் படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை. ஆனாலும் புளியங்கொம்பை வளைத்துவிட்டார் இங்கு. மனைவியுடன் சந்தோஷமாக இருப்பது போல போக்குக் காட்டிக் கொண்டிருந்த நடிகரும் வாரிசு நடிகையும் பிசினாக ஒட்டிக் கொண்டனர்.
இல்லையில்லை... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை என இருவருமே மறுத்து வந்தாலும், இனி இங்கிருந்தால் சரிப்படாது... மும்பைப் பக்கம் போய்விடலாம் என ஜாகையை மாற்றிக் கொண்டுள்ளனர்.
தான் நடிக்கும் இந்திப் படத்தை சாக்காக வைத்து நடிகர் மும்பையில் தனி ப்ளாட் பார்த்து, அதில் வாரிசை குடியமர்த்திவிட்டார்.
இந்த விவரங்களை அனைத்தும் மும்பையிலிருக்கும் தன் குடும்ப நண்பர்கள் மூலம் அப்டுடேட்டாக தெரிந்தும், குடும்ப கவுரவம் கருதி அமைதியாக இருக்கிறாராம் மனைவி!
ஏற்கெனவே 'சீதை'யிடம் கிறங்கிக் கிடந்தபோது மாமனாரிடம் வாங்கியதைக் கூட நடிகர் மறந்துவிட்டாரே.. அண்டர் கிரவுண்ட் ட்ரீட்மெண்ட் எப்பவோ என கிசுகிசுக்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்!!


Click it and Unblock the Notifications