கல்யாணம் ரத்தானதற்கு கடவுளுக்கு நன்றி சொன்ன நடிகை!
நிச்சயம் பண்ண திருமணம் நின்னுப் போச்சே என்று நடிகை வருத்தப்படுவாரோ என யாராவது நினைத்தால்... நோ.. அந்த நினைப்பை மாத்திக்குங்க. கல்யாணம் நின்றதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார் அவர்.
அம்மணி இப்போதுதான் ரொம்ப ஹேப்பியா இருக்காங்களாம். காரணம் இரண்டு.
ஒன்று, ஆரம்பத்திலேயே இருவருக்குமான புரிதல் இல்லை என்பது புரிந்துவிட்டது. இதையும் தாண்டி திருமணம் செய்திருந்தால், அடுத்த சில மாதங்களிலேயே விவாகரத்துக்காக படியேற வேண்டியிருந்திருக்கும் நல்லதாப் போச்சு, என்கிறாராம்.

இரண்டு... அம்மணிக்கு உச்ச நட்சத்திரத்துடன் ஒரு படமாவது ஜோடி போட்டுவிட வேண்டும் என்பது அவரது 13 ஆண்டு கால கனவு. கல்யாணம் பண்ணியிருந்தா, அது கனவாகவே இருந்திருக்கும். இப்போது திருமணம் நின்று போனதால், அந்தக் கனவு நனவாகும் வாய்ப்பிருக்கே என சந்தோஷப்படுகிறாராம்.
அடுத்தடுத்து நான்கு படங்கள் நடிக்கப் போகிறாராம் உச்ச நடிகர். அந்த நான்கில் ஒன்றிலாவது வாய்ப்பு வராமலா போகும்?
நடிகையின் பெயரை இதுக்கு மேலயும் சொல்லணுமா என்ன!


Click it and Unblock the Notifications











