கரகாட்ட நடிகை குத்திய டாட்டூ… டைரக்டருக்கு தெரியுமா?
சென்னை: கோலிவுட், பாலிவுட் என பல முன்னணி நடிகைகளும், டாட்டூவில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
நடிகைகளின் உடம்பின் எல்லா பாகங்களிலும் இந்த டாட்டூ வந்து உட்கார்ந்து கொள்கிறது. இதற்கான ஸ்பெஷல் மையங்கள் சென்னையில் பல இடங்களில் இருந்தாலும், இதற்கு நுங்கம்பாக்கம்தான் பிரபலமாம். இங்குதான் பல நடிகைகள் வந்து டாட்டூ போட்டுச் செல்கின்றனராம்.
டாட்டூ வரைய லட்சங்களை கொட்டுகிற நடிகைகளும் இருக்கிறார்கள். நடிகைகள் பட்டும் படாமலும் வரைகிற டாட்டூக்கள் ஏக கவர்ச்சியாக இருப்பது வேறு விஷயம்.
அவசரத்தில் குத்திய டாட்டூவை அழிக்க முடியாமல் சில நடிகைகள் தடுமாறி வர, புதிதாக கரகாட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை டாட்டூ குத்திவிட்டு தற்போது கவலையில் இருக்கிறாராம்.
கடவுள் இயக்குநர் படத்தில் கரகாட்டக்காரியாக நடிக்கும் இவர் தனது கையில் பளிச்சென்று தெரிகிற இடத்தில் ஒரு டாட்டூவை வரைந்து வைத்திருக்கிறார்.
கதைப்படி கிராமத்து கரகாட்டக்காரி இவ்வளவு ஸ்டைலான டாட்டூவை வரைந்திருக்க முடியாதுதானே? இயக்குநர் கொந்தளிப்பதற்குள் அதை மறைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
கிராமபுறங்களில் பாட்டியம்மாக்களெல்லாம் குத்திக் கொள்ளாத பச்சையா? கடவுள் இயக்குநருக்கு தெரிந்தாலும் பிரச்சனையில்லை என்று ஆறுதல் சொல்லி வருகிறாராம் நடிகையின் நெருங்கிய தோழர்.


Click it and Unblock the Notifications











