அவசரப்பட்டு இப்டி பண்ணிடீங்களே.. இனி உங்கள யார் ஏத்துப்பா.. நடிகையை ஓரங்கட்டும் கோலிவுட்
திருமணத்திற்குமுன்பே குழந்தை பெற்றுக்கொண்ட நடிகைஒருவர் மீண்டும் நடிக்க வாய்ப்பு தேட ஆரம்பித்திருக்கிறாராம்.
சென்னை: நடிப்புக்கு தற்காலிக ஓய்வு கொடுத்திருந்த நடிகைஒருவர் மீண்டும் நடிக்க வாய்ப்பு தேட ஆரம்பித்திருக்கிறாராம்.
டாப் ஹீரோக்களுடன் நடித்த அந்த நடிகைவெளிநாட்டை சேர்ந்தவர். தமிழ் மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும்ஒரு ரவுண்ட் வந்து கலக்கினார். நடிகையும் கிராமத்து கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, மாடர்ன் நாயகியாக இருந்தாலும் கச்சிதமாக நடித்துக் கொடுத்தார்.
பிரமாண்டஇயக்குனரின் படத்தில் நடித்த அந்த நடிகை, கவர்ச்சியில் தாராளம் காட்ட தயங்கியதில்லை. இதனால் அவருக்கு வாய்ப்புகள் கொட்டின.

தொழிலதிபருடன் காதல்
அவரை பார்த்து மற்ற நடிகைகள் எல்லாம்பொறாமைப்படும் அளவுக்கு படங்களில் நடித்தார். நடிகையில் அதிர்ஷ்டமோ என்னவோ அவருக்கும் பெரிய பெரிய படங்களாக அமைந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளிநாட்டு தொழிலதிபருடன் காதல் வயப்பட்ட நடிகை, திடீரென பாரீன் பறந்துவிட்டார்.

கர்ப்பம்
சில காலம் அங்கு தங்கியிருந்தநடிகை, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். வெளிநாட்டில் இதெல்லாம் சகஜம் என்பதால், தனது கர்ப்பத்தை அவர் மறைக்கவில்லை. தாய்மையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து, ருசித்து குழந்தை பெற்றுக்கொண்டார்.

மீண்டும் நடிப்பு
இப்போதுஅவர் தான் மீண்டும் நடிக்கரெடி என்பதை சூசகமாக தெரிவித்துவருகிறார். சில மாதங்களாக குழந்தைபேறு தொடர்பான புகைப்படங்களை மட்டுமே தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வந்த நடிகை, தற்போதுமீண்டும் தனது கவர்ச்சியானபோட்டோக்களை பதிவிடத் தொடங்கியுள்ளார்.

வாய்ப்பு தேடும் படலம்
இதன் மூலம் தான் மீண்டும்நடிக்க தயார் என்பதை நடிகைமறைமுகமாக குறிப்பிடுவதாகவே கோலிவுட்டில் பேசிக்கொள்கின்றனர். மேலும் தனக்கு நெருக்கமானஇயக்குனர்கள் மற்றும் ஹீரோக்களை தொடர்புகொண்டும் நடிகை பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.

சந்தேகம் தான்
ஆனால் பழையபடி நடிகைக்கு மார்க்கெட்இருக்குமா? என ஹீரோக்களும், இயக்குனர்களும்யோசிக்கின்றனர். பொதுவாக ஒரு நடிகைக்குதிருமணம் முடிந்துவிட்டாலே, நம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தயாரிப்பாளர்கள் நினைப்பார்கள்.

ஹீரோக்கள் தயக்கம்
இந்த சூழலில் நடிகை குழந்தையேபெற்றெடுத்துவிட்டார். எனவே மீண்டும் அவருக்குவாய்ப்பு கொடுப்பதற்கு பெரிய ஹீரோக்களும், இயக்குனர்களும்தயக்கம் காட்டுவதாகவே கூறப்படுகிறது. தமிழில் மட்டுமல்ல, இந்தியிலும்நடிகைக்கு அதே நிலை தானாம்.

ரசிகர்கள் மனநிலை
திருமணம்செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்வது வெளிநாட்டில்வேண்டுமானால் சகஜமாக இருக்கலாம். ஆனால்நம் நாட்டில் அப்படி செய்தால், ரசிகர்கள்ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என பெரிய ஹீரோக்களேநினைக்கிறார்களாம். எனவே நடிகை மீண்டும்நடிப்பாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications











