இப்படி என் மானத்த வாங்குகிறாரே..: கணவர் மீது கடுப்பில் நடிகை
சென்னை: மோக்கியா படத்தில் இப்படி காமெடி பீஸாக நடித்து என் இமேஜை டேமேஜ் செய்கிறாரே என்று நடிகை தனது இயக்குனர் கணவர் மீது கோபத்தில் உள்ளாராம்.
பெரிய திரையில் கலக்கி ஓய்ந்த பிறகு சின்னத் திரைக்கு வந்த கோலங்கள் நாயகி ராஜ புத்திரன் இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகு அவர்கள் ஜோடியாக நடித்த படம் கூட ரிலீஸானது. அந்த படத்தில் இருந்து அவரது கணவர் சோலாராகிவிட்டார். சோலார் தற்போது மோக்கியா ஹீரோவாக நடித்துள்ள படத்தில் காமெடி பீஸாக நடித்துள்ளார் சோலார்.
லட்டு படத்தில் மோக்கியா பவரை கலாய்த்து கலாய்த்து படத்தை ஓட்டினார். தற்போது அவர் சோலாரை படத்தில் சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்துள்ளாராம். இது குறித்து அறிந்த நடிகை கடுப்பாகிவிட்டாராம். இந்த மனிதர் இப்படி என் இமேஜை டேமேஜ் செய்கிறாரே என்று கணவர் மீது கோபத்தில் உள்ளாராம்.
மனைவியின் பேச்சை தட்டாத சோலார் இந்த விஷயத்தில் அவர் கூறுவதை காதில் வாங்குவதே இல்லையாம். இந்த விவகாரத்தில் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











