நடிகையை அனுபவிக்க குடும்பத்தை அம்போனுவிட்ட நடிகர்.. தூதுவிட்டே மயக்கிய நடிகை!
சென்னை: இவர்கள் விஷயத்தில் இருவருமே ருசி கண்ட பூனைகளாகத்தான் இருக்கிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம். இருவருமே பெரிய இடத்து நடிகர் - நடிகை என்பதால் இவர்களுக்கு இடையில் நடப்பதை பார்த்த பலரும் காதும் காதும் வைத்தது போலத்தான் பேசிக் கொள்கிறார்களாம்.
இந்த நடிகர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன். இந்த நடிகையுன் முதல் படத்தில் இணைந்து நடித்தபோதே நடிகைக்கு இந்த நடிகர் மீது தீராத மோகம் வந்துவிட்டதாம். இதனால் என்ன செய்துள்ளார் என்றால், நடிகரின் படம் வந்தால் மற்ற படங்களின் தேதிகளை ஒதுக்கி வைத்துவிட்டு நடிகரின் படத்தில் நடிக்க சென்று விடுவாராம். இதற்காகவே பல படங்களை நடிகை விட்டுள்ளாராம்.
இது மட்டும் இல்லாமல் நடிகருக்கு தன் மீது அட்டேன்சன் வரவேண்டும் என நடிகை தனது பட இயக்குநர்களுக்கு தனது உதவியாளர்கள் மூலம் தூதுவிடுவாராம். அதாவது, இந்த நடிகருடன் நடிப்பது மிகவும் சௌகரியமாக உள்ளது. அவருடன் நெருக்கமான காட்சிகள் நடித்தால் படத்திற்கு ஓ.கே. என்றால் கூட நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என சொல்லி விடுவாராம்.

தூதுவிட்டே மயக்கிய நடிகை: இயக்குநர்கள் இதை தவறவிடாமல் செய்து வந்துள்ளார்கள். ஒரு வழியாக நடிகரை தனது வலையில் வீழ்த்திய நடிகைக்கு ஓவர் குஷியாம். இதனால் தனக்கு நெருக்கமான வட்டாரத்தினரை மட்டும் அழைத்து தனி பார்ட்டியே வைத்துள்ளார். நடிகரின் திருமண வாழ்க்கை குறித்து நடிகைக்கு ஏற்கனவே நன்றாக தெரிந்ததுதான் என்றாலும், நடிகர் மீது இருந்த மோகத்தால் நடிகை பல தில்லாலங்கடி வேலைகளைப் பார்த்துள்ளார்.
நடிகையை அனுபவிக்க: நடிகரும் ருசி கண்ட பூனையை போல, நடிகையை அனுபவிக்க தனது குடும்பத்தை அம்போனு விட்டுவிட்டு இப்போது நடிகையே கதி என இருக்கிறாராம். நடிகரின் மனைவியோ இது குறித்து எதுவும் பேசாமல் கப்சிப் என அமைதியாகவே இருக்கிறாராம். அதுவும் நடிகரின் மனைவிக்கு இவர்களின் இந்த லீலை விளையாட்டுக்கள் தெரிந்தும் அவர் மிகவும் அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். நடிகரும் தனது வீட்டிற்கு மிக அருகிலேயே நடிகைக்கு தனி வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்து விட்டாராம். இருவரும் தனியாக சந்தித்துக் கொள்வது மற்ற விஷயங்கள் எல்லாம் அங்கேதானாம்.


Click it and Unblock the Notifications











