Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்
சென்னை: காமெடி நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் தயங்குகிறார்களாம்.
காமெடி நடிகர் ஒருவர் சுபயோக சுபதினத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவாக நடிக்க வந்துவிட்டதா என்று சிலர் கிண்டல் செய்தனர். அதை எல்லாம் நடிகர் காதில் வாங்கவில்லை.
அவரை தேடி தொடர்ந்து ஹீரோ வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பெரிய லெவலுக்கு வர வேண்டும் என்று நடிகர் விரும்புகிறார். தான் இத்தனை ஆண்டுகளாக பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்று நடிகர் நிம்மதியில் உள்ளார்.
நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஆள் கிடைப்பது தான் கஷ்டமாக உள்ளதாம். இந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று நடிகைகள் முகத்தில் அடித்தது போன்று கூறிவிடுகிறார்களாம். இல்லை என்றால் பெரிய தொகையை சம்பளமாக கேட்கிறார்களாம்.
மார்க்கெட் இல்லாத நடிகைகள் கூட அந்த நடிகருக்கு ஜோடியாக நடிக்க பெரிய தொகையை கேட்பது தான் தயாரிப்பாளர்களை அதிர வைக்கிறது. நடிகருக்கு ஜோடி தேடுவதற்குள் தயாரிப்பாளர்களுக்கு கண்ணை கட்டிக் கொண்டு வருகிறதாம்.
ஹீரோவான பிறகு நடிகர் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறார். அவர் தற்போது நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை உடனே சம்மதம் தெரிவிக்கவில்லையாம். பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பெரிய தொகை அளிக்க ஒப்புக் கொண்ட பிறகே நடிகை ஓகே சொல்லியுள்ளார்.
காற்றிருந்த போது தான் தூற்றவில்லை இப்போதாவது செய்யலாம் என்று நடிகை வெயிட்டான தொகையை வாங்கியிருக்கிறார்.