அந்த ஆளு வேண்டாம்: நடிகையுடன் மல்லுக்கட்டிய அம்மா
சென்னை: கண்ணழகி நடிகை வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்வது அவரின் அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.
கண்ணழகி நடிகை தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த அவருக்கும், உயரமான தெலுங்கு நடிகருக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகை வெளிநாட்டு தொழில் அதிபர் ஒருவரை காதலித்துள்ளார். அவர்களுக்கு அடுத்த வாரம் இந்தியாவில் திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்தில் நடிகையின் அம்மாவுக்கு இஷ்டம் இல்லையாம்.
நம் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் யாரையாவது திருமணம் செய்ய வேண்டியது தானே, வெளிநாட்டுக்காரர் ஏன் என்று அம்மா கேட்கிறாராம். இந்த விஷயத்தால் அம்மாவுக்கும், நடிகைக்கும் இடையே பிரச்சனையாம்.
யார் என்ன சொன்னாலும் அவரை தான் மணப்பேன் என்று அடம்பிடித்து திருமணத்திற்கும் தயாராகிவிட்டாராம் நடிகை.
Comments


Click it and Unblock the Notifications