ஒல்லிப்பாச்சான் நடிகரும், மனைவியும் ஒழுங்காக பேசிய பல நாளாச்சாம்
சென்னை: பெரிய இடத்து மாப்பிள்ளையான ஒல்லிப்பாச்சான் நடிகருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை பெரிதாகிவிட்டதாம்.
பெரிய இடத்து மாப்பிள்ளையான ஒல்லிப்பாச்சான் நடிகருக்கு என்ன ராசியோ, என்னவோ ஆள் சுமாராக இருந்தாலும் அவருடன் நடிக்கும் நடிகைகள் அவரை மிகவும் இனிமையானவர், அப்படி இப்படி என்று கூறுகிறார்கள். இதை கேட்டும் கேட்காத மாதிரி அவரது மனைவி இருந்து வந்தார்.
ஒல்லிப்பாச்சானுக்கும் மன்மதனின் மகளுக்கும் ஒரு படத்தில் நடிக்கையில் நெருக்கமாகிவிட்டதாம். இதையடுத்து மன்மதன் தனது மகளை வேறு மாநிலத்தில் செட்டிலாக்கிவிட்டுவிட்டாராம். இந்த விவகாரத்தால் நடிகரும், அவரது மனைவியும் முகம் கொடுத்து பேசிய பல நாளாகிவிட்டதாம்.
இந்நிலையில் ஒல்லிப்பாச்சானுக்கும் மற்றொரு நடிகைக்கும் நெருக்கமாகிவிட்டது என்று செய்திகள் வர மனைவி டென்ஷனாகிவிட்டாராம். இதனால் ஏற்கனவே உள்ள பிரச்சனை பெரிதாகியுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











